சப்வே ரயில் நிலையங்களில் முத்தமிட்டால் அவ்வளவு தான்: சீனா போலீசார் எச்சரிக்கை
பெய்ஜிங்: சீனாவில் உள்ள சப்வே ரயில் நிலையங்களில் முத்தமிடும் காதல் ஜோடிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள லியாவ்னிங் மாகாணம் ஷென்யாங்கில் இருக்கும் சப்வே ரயிலில் காதல் ஜோடி ஒன்று சுற்றியுள்ளவர்களை மறந்து முத்தமிட்டதுடன், ஒருவரையொருவர் மறந்த நிலைக்கு சென்றனர்.
இதை யாரோ வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். வீடியோவை பார்த்த பலரும் அந்த காதல் ஜோடியை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்துள்ளனர். சப்வேயில் முத்தமா? ஜாக்கிரதை போலீசார் உங்களிடம் விசாரணை நடத்தக்கூடும் என்று உள்ளூர் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து ஷென்யாங் போலீசார் கூறுகையில்,
சப்வேயில் காதல் ஜோடி முத்தம் கொடுத்தது தொடர்பாக விசாரித்து வருகிறோம். சப்வேயில் இனி ஜோடிகள் யாரும் முத்தம் கொடுத்தால் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றனர்.












Click it and Unblock the Notifications