புதிய எய்ட்ஸ் நோயாளிகள்: இந்தியாவில் 1.16 லட்சம்; சீனாவில் 70 ஆயிரம்

Subscribe to Oneindia Tamil

பீஜிங்: இந்தியாவில் கடந்த ஆண்டு 1.16 லட்சம் புதியவர்களுக்கு எய்ட்ஸ் நோய் தாக்கியுள்ளது. சீனாவில் கடந்த 9 மாதங்களில் மட்டும் சுமார் 70 ஆயிரம் புதியவர்களுக்கு எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

உலக எய்ட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே சர்வதேச எய்ட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988-ல் நடைப்பெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

கொல்லும் கொடூர நோய்

கொல்லும் கொடூர நோய்

1981-ஆம் ஆண்டிலிருந்து 2007-ஆம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோயால் இறந்தவரின் எண்ணிக்கை 250 லட்சங்களுக்கு மேல். 2007-ஆம் ஆண்டு வரை 332 லட்சம் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வருகின்றனர். இதனால் இந்நோய் வரலாற்றிலேயே மிக கொடூரமான தொற்றுநோயாக கருதப்படுகிறது

உலக சுகாதார அமைப்பு

உலக சுகாதார அமைப்பு

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பில் எய்ட்ஸ்க்கான உலகளாவிய நிகழ்ச்சியின் பொது தகவல் அதிகாரிகளான ஜேம்ஸ் பன்ஸ் மற்றும் தாமஸ் நெட்டேர் எனும் இருவரால் 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டதே உலக எய்ட்ஸ் தினம். கடந்த 25 ஆண்டுகளாக டிசம்பர் 1ம் தேதியை உலக நாடுகள் எய்ட்ஸ் தினமாக கடைபிடித்து வருகின்றன.

குழந்தைகளும் பாதிப்பு

குழந்தைகளும் பாதிப்பு

சமீபத்திய சிகிச்சை முறைகளின் முன்னேற்றம் மற்றும் கண்காணிப்பின் கீழ் இருந்தும், எய்ட்ஸ் நோயால் உலகெங்கிலும் 2007-ஆம் ஆண்டில் 20 லட்சம் உயிரிழப்பு ஏற்பட்டது. இதில் 2,70,000 குழந்தைகள்.

இந்தியாவில் 1.16 லட்சம் எய்ட்ஸ்

இந்தியாவில் 1.16 லட்சம் எய்ட்ஸ்

இந்தியாவில் 2011ம் ஆண்டு 1.48 லட்சம் மக்கள் எய்ட்ஸ் நோய் பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிக அளவாக 1,11,663 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு 1.16 லட்சம் புதிய எய்ட்ஸ் நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் 14,500 பேர் குழந்தைகள்.

சீனாவில் புதிய நோயாளிகள்

சீனாவில் புதிய நோயாளிகள்

இந்நிலையில், மக்கள் தொகையில் உலகின் பெரிய நாடாக விளங்கும் சீனாவில் கடந்த 9 மாதங்களில் மட்டும் சுமார் 70 ஆயிரம் புதியவர்களுக்கு எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்று சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

4,34000 எய்ட்ஸ் நோயாளிகள்

4,34000 எய்ட்ஸ் நோயாளிகள்

சீனாவில் உள்ள 31 மாகாணங்களிலும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் தற்போது 2 லட்சத்து 9 ஆயிரம் பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 34 ஆயிரமாக உயர்ந்துள்ளது என்று சீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+