வெற்றி! வெற்றி! வெற்றி!... சந்திரனில் தரையிறங்கியது சீனாவின் முதல் விண்கலமான ‘சேஞ்ச்-3’
பெய்ஜிங்: சந்திரனைப் பற்றி ஆராய்வதற்காக சீனாவின் சார்பில் அனுப்பப் பட்ட சேஞ்ச்-3 விண்கலம் வெற்றிகரமாக சந்திரனில் தரை இறங்கியுள்ளது.
கடந்த 2ம் தேதி, சீனா 'சேஞ்ச்-3' என்ற விண்கலத்தை சந்திரனைக் குறித்து ஆராய்வதற்காக ஸிவாங் தளத்தில் இருந்து அனுப்பியது. இந்த விண்கலத்தை 'லாங் இந்த மார்ச் 3பி' என்ற ராக்கெட் சுமந்து சென்றது.
இந்த விண்கலமானது திட்டமிட்டப் படி சந்திரனில் தரை இறங்கியுள்ளதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

12 நாள் பயணம்....
'சேஞ்ச்-3' விண்கலம் திட்டமிட்டபடி 12 நாள் பயணத்துக்கு சந்திரனில் தரை இறங்கியுள்ளது.

3வது நாடு...
இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யாவிற்கு அடுத்படியாக ஆளில்லா விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பிய மூன்றாவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜேட் ராபிட்...
நான்கு கால்களுடன் முயல் போல் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த விண்கலத்திற்கு "ஜேட் ராபிட்" என பெயரிடப்பட்டுள்ளது.

இயற்கை வளங்கள்...
இந்த விண்கலம் சந்திரனில் ஓரண்டு தங்கியிருந்து அங்கிருந்தபடியே பூமியின் மேற்பரப்பில் உள்ள இயற்கை வளங்களை ஆய்வு செய்து சீனாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்துக்கு தகவல்களை அனுப்பி வைக்கும்.

அடுத்தது மனிதர்கள்....
2020-ல் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் சீனாவின் விண்வெளி திட்டத்தின் முதல் கட்டமாக 'சேஞ்ச் 3'-ன் வெற்றிகரமான இந்த பயணம் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications