நிலாவில் வெற்றிகரமாய் தரையிறங்கியது சீன விண்கலம் சேஞ்ச்-3!
பீஜிங்: சந்திரனில் தரை இறங்கிய சீனா ஆய்வுக்கலன் படம் பிடித்து அதனை பூமிக்கு அனுப்பியது. இதை பார்த்து அதிபர் ஜீ ஜின்பிங் கைத்தட்டி மகிழ்ச்சி தெரிவித்தார்.
கடந்த 2ம் தேதி, சீனா 'சேஞ்ச்-3' என்ற விண்கலத்தை சந்திரனைக் குறித்து ஆராய்வதற்காக ஸிவாங் தளத்தில் இருந்து அனுப்பியது. இந்த விண்கலத்தை 'லாங் இந்த மார்ச் 3பி' என்ற ராக்கெட் சுமந்து சென்றது.
'சேஞ்ச்-3' விண்கலம் திட்டமிட்டபடி 12 நாள் பயணத்துக்கு சந்திரனில் தரை இறங்கியது. தற்போது அங்கிருந்தபடி புகைப்படங்களை அனுப்பி வருகிறது அந்த விண்கலம். இதனால் தங்களது திட்டம் வெற்றி பெற்று விட்டதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

3வது நாடு...
சேஞ்ச்-3 விண்கலத்தை அனுப்பியதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக ஆளில்லா விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பிய மூன்றாவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜேட் ராபிட்....
நான்கு கால்களுடன் முயல் போல் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த விண்கலத்திற்கு "ஜேட் ராபிட்" என பெயரிடப்பட்டுள்ளது. இந்த விண்கலம் சந்திரனில் ஓரண்டு தங்கியிருந்து அங்கிருந்தபடியே பூமியின் மேற்பரப்பில் உள்ள இயற்கை வளங்களை ஆய்வு செய்து சீனாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்துக்கு தகவல்களை அனுப்பி வைக்கும்.

சீனக் கொடியுடன்....
தற்போது சந்திரனில் தரை இறங்கியுள்ள இந்த ஆய்வுக்கலன் இரவு 11.42 மணி அளவில் சுமார் 9 மீட்டர் தூரம் ஊர்ந்து சென்றது. இது அதன் கேமராவில் படமாக பதிவானது.பின்னர் இந்த காட்சிகள் கொண்ட படங்களை பூமிக்கு அனுப்பி வைத்தது. அதில் சீனாவின் தேசிய கொடி பறக்கும் காட்சியும் தெரிந்தது.

முதல்படம்....
ஆய்வுக்கலன் அனுப்பிய படம் சீனாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருக்கும் பெரிய கண்காணிப்பு திரையில் விழுந்தது.

ஆரவார வரவேற்பு....
அதனை நேரடியாகப் பார்த்த அதிபர் ஜீ ஜின்பிங், பிரதமர் லீ கெகுயாங் ஆகியோர் கைகளை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

வெற்றி..வெற்றி...
இந்த சந்திரனின் ஆய்வு திட்டப்பணி முழுமையாக வெற்றி பெற்று விட்டது என திட்டத்தலைவர் மா ஜிங்ரூயி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர். மேலும், சந்திரனுக்கு அடுத்த கட்டமாக 2017-ம் ஆண்டில் விண்கலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications