தைவானை வளைத்த சீனாவின் 'போர் விமானங்கள்'.. அதிர்ந்து போன அமெரிக்கா.. எகிறும் போர் பதற்றம்
தாய்பெய்: தைவானை நிர்வகித்து வரும் டிசாய் இங்-வென் சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தலைவரும், குடியரசுக் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான கெவின் மெக்கார்த்தியை சந்தித்தார். இந்த சம்பவத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து சீன போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் தைவானை சுற்றி வளைத்துள்ளன.
ஒன்றுபட்ட சீனாவின் ஒரு அங்கமாக தைவான் கருதப்படுகிறது. உலக நாடுகள் பல மற்றும் ஐநா உள்ளிட்ட அமைப்புகளும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால் அமெரிக்கா சமீப நாட்களாக இந்த கருத்திலிருந்து விலகியுள்ளது. அதாவது தைவான் ஒரு சுதந்திர ஜனநாயக நாடு என்று கூறி வருகிறது. எனவே அந்நாட்டை நிர்வகிக்கும் அதிகாரிகளுடன் தொடர்ந்து தன்னிச்சையாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு இப்படிதான் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலுச்சி தைவான் வந்திருந்தார்.

இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றும் வகையில் தைவானை சுற்றியுள்ள தீவில் சீன ராணுவத்தின் விமான படை குண்டுகளை வீசி போர் பயிற்சி மேற்கொண்டது. எனவே கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. ஆனால் சீனா போரில் இறங்கவில்லை. இதனையடுத்து தற்போது தைவானை நிர்வகித்து வரும் டிசாய் இங்-வென் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் ஒரு அங்கமாக அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தலைவரும், குடியரசுக் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான கெவின் மெக்கார்த்தியை சந்திக்கவும் முடிவெடுத்தார்.
இது மீண்டும் போர் குறித்த அச்சத்தை அதிகரித்திருக்கிறது. ஏனெனில் மேற்குறிப்பிட்டதைப் போல சீனாவின் ஒரு அங்கமாக இருக்கும் தைவானை தூண்டிவிட அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. அந்த செயல் திட்டத்தின் ஒரு பகுதிதான் டிசாய் இங்-வென் - கெவின் மெக்கார்த்தி சந்திப்பு. சீனா மட்டுமல்லாது தைவானில் உள்ள 50 கட்சிகள் மற்றும் அமைப்புகள் சீனாவுடன் தைவான் இருக்க வேண்டும் என்று வலிறுத்தி போராட்டங்கள் நடத்த தொடங்கியுள்ளன. எனவே சீனாவும் தனது பங்குக்கு போர்க்கப்பல்கள் மற்றும் ஜெட் விமானங்களை தைவான் தீவை நோக்கி அனுப்பி வைத்திருக்கிறது.
இன்றைய நிலவரப்படி சுமார் 9 சீன போர்க்கப்பல்கள் மற்றும் 48 ஜெட் விமானங்கள் தைவானை சுற்றி நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்த கப்பல்களும், விமானங்களும் இலக்கை துல்லியமாக தாக்கக்கூடியது என்று சீன ஊடகங்கள் கூறியிருக்கிறது. இதில் J-18 (Jianjiji-18) எனும் போர் விமானத்தை சீனா பயன்படுத்தியுள்ளது. இந்த வகை விமானங்கள் நீர்மூழ்கி கப்பல்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டவையாகும். அதேபோல இது பறப்பதற்கு மிக குறைந்த தொலைவிலான ஓடு பாதை இருந்தாலே போதுமானதாகும். மேலும், தரையிறங்கும்போது இது செங்குத்தாக ஹெலிகாப்டர் போன்று தரையிறக்கும். அமெரிக்காவின் நவீன போர் விமானங்களுக்கே இது சவால் விடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications