அந்த '800 மீட்டர்' நிலப்பரப்புக்குதான்.. கால்வானில் இந்தியாவுடன் சீனா மோதுவதன் பின்னணி
பெய்ஜிங்: கால்வான் பள்ளத்தாக்கில் சீனா பின்வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உண்மையில் சீனா இந்தியாவிடம் புதிதாக பிரச்சனை எழுப்பி வருவது 800 மீட்டர் நிலப்பரப்பிற்கு தான் என்பது தெரியவந்துள்ளது.
Recommended Video
கால்வான் பள்ளத்தாக்கின் ரோந்து பாய்ண்ட் 14 இலிருந்து இந்திய மற்றும் சீன இராணுவ நிலைகள் ஓரளவிற்கு படைகளை விலக்கி கொண்டு பின்வாங்கி உள்ளன., சீனா இதுவரை எவ்வளவு பகுதியை ஆக்கிரமித்து உரிமை கோரியது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல ஆங்கில ஊடகமான இந்தியா டுடே வெளியிட்டிருந்த செய்தியில், ரோந்து பாய்ண்ட் 14 இலிருந்து இந்தியப் பகுதியில் உள்ள 800 மீட்டர் நிலப்பரப்பை தங்களுக்கு சொந்தம் என சீனா வெளிப்படையாக உரிமை கோருகிறது என்பதை உறுதிப்படுத்தி உள்ளதாக கூறியுள்ளது

61 ஆண்டு வரலாறு
சீன வெளியுறவு அமைச்சகம் கால்வான் பள்ளத்தாக்கு விவகாரங்கள் குறித்து வெளியிட்ட அறிக்கைகளுக்கு மத்தியில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த ஒரு ராணுவ அதிகாரிகள் அளவிலான கூட்டத்தில் 800 மீட்டர் பரப்பளவைத்தான் முதல்முதலாக உரிமை கோரியது. கால்வான் பள்ளத்தாக்கில் உண்மையிலேயே இதுதான் எல்லைக்கோடு என்று இருநாடுகளும் வரையறுக்கவில்லை. இப்போது உள்ள எல்லைக்கோடு என்பது கற்பனைக்கோடாகவே பார்க்கப்பட்டது. 61 ஆண்டுகளுக்கு முன்னர் வரலாற்றை திருப்பி பார்த்தால் சில விஷயங்கள் தெளிவாக தெரிய வந்துள்ளது.

பிரச்சனைக்கு காரணம்
1959 ஆம் ஆண்டில், இந்தியாவும் சீனாவும் ரோந்து பாய்ண்ட் 14 வரை பரஸ்பரம் எல்லையாக ஒப்புக் கொண்டன. அதன்பிறகு இது நாள் வரை அங்கு பிரச்சனை எழுந்தது இல்லை. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் முதன் முதலாக சீனர்கள் 800 மீட்டர் நிலப்பரப்பிற்கு உரிமை கோரியுள்ளனர். இது தான் பிரச்சனைகளுக்கு காரணமாகி உள்ளது.

சீன படைகள் விலகல்
ஏனெனில் 1962 ம் ஆண்டு ஒரு செய்தித்தாள் பேனர் தலைப்பு சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அந்த தலைப்பில் 'சீன துருப்புக்கள் கால்வான் பள்ளத்தாக்கில் இருந்து விலகுகிறார்கள்' என்றும், 'டெல்லி எச்சரிக்கை விடுத்துள்ளது' என்று இருக்கிறது. இப்படி ஒரு செய்திகள் வந்து 91 நாட்களுக்குப் பிறகு, 1962 போர் வெடித்தது. அத்துடன் கால்வான் பள்ளத்தாக்கு, சீனப் படையினரால் கைப்பற்றப்பட்டது.

சீனாவின் தந்திரங்கள்
2020 ஆம் ஆண்டு மிகவும் வித்தியாசமானது. இப்போது இந்தியா வலிமையாக உள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரடியாக சீனாவை எச்சரித்தது. இந்தியா பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது. தற்போதைய நிலையில் லடாக் மீது எல்லா ஊடகங்களின் பார்வையும் உள்ளது. ஆனால் லடாக்கில் சீனா படைகளை பின் வாங்கி கொண்டு சென்றுள்ளது. ஆனால் அதே நேரம் மற்ற இடங்களில் சீன மோதலில் இறங்கி உள்ளது. வடக்கு சிக்கிமில் இந்திய இராணுவத்துடன் மீண்டும் மீண்டும் மோதியுள்ளளது. நேபாள பிரச்சனை என்பது சீனா தந்திரத்துடன் இந்தியாவிற்கு எதிராக அந்நாட்டை திருப்பிடவிட்டிருப்பது தெரியவந்துள்ளது

இந்தியா எச்சரிக்கை
இதனிடையே சீனா, எல்லையில் தனது படைகளை கொஞ்சம் விலகி இருக்க உத்தரவிட்டிருந்தாலும், பின்னாளில் பிரச்சனை எழுப்ப வாய்ப்பு உள்ளது. ஏனெனில் கடந்த கால செயல்பாடுகளை பார்க்கும் போது சீனாவை நம்ப இயலாது. இனி வரும் நாட்களில் இந்தியா சீனா இடைய அதிக அளவில் பேச்சுவார்த்தை கூட்டங்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சுமூக உடன்பாடுகள் எட்டப்பட்டால் பிரச்சனைகள் சரியாக வாய்ப்பு உள்ளது. ஆனால் அதேநேரம் எதிர்பார்க்காத சூழலில் திடீரென மோதலில் ஈடுபட்டு எல்லையை ஆக்கிரமிக்கும் செயல்களில் ஈடுபட வாய்ப்பும் இருப்பதால் இந்தியா எச்சரிக்கையுடன் உள்ளது. இந்தியாவிற்கு சீனாவிற்கும் இடைய பலமுறை நடந்த பேச்சுவார்த்தையின் போது ராஜதந்திர ரீதியில் இந்த பிரச்சனை சரி செய்யப்படாமல் போனது வியப்பான ஒன்று.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications