லடாக் மீது ஒரு கண்.. இன்னொரு பக்கம் போர் ஒத்திகையை தொடங்கிய சீனா.. தென்சீன கடல் எல்லையில் பதற்றம்!
பெய்ஜிங்: தென் சீன கடல் எல்லையில் சீனாவின் கடற்படை தீவிரமான போர் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. சீனாவின் இந்த செயல் காரணமாக தென்சீன கடல் எல்லையில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.
Recommended Video
லடாக் எல்லையில் இந்தியா சீனா இடையே கடுமையான பிரச்சனை நிலவி வருகிறது. அதிலும் கல்வான், பாங்காங் திசோ, ஹாட்ஸ்பிரிங்ஸ், டெப்சாங் ஆகிய பகுதிகளில் சீனாவின் ராணுவம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
அங்கு படைகளை குவித்து சீன ராணுவம் அவ்வப்போது அத்துமீறி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவுடன் மட்டும் சீனா இப்படி மோதலை கடைபிடிக்கவில்லை. இன்னொரு பக்கம் வேறு சில நாடுகள் உடனும் எல்லையில் சீனா மோதலை கடைபிடித்து வருகிறது.

தென் சீன கடல் எல்லை
அதன்படி சீனா தற்போது தென் சீன கடல் எல்லையில் அண்டை நாடுகளுடன் மோதி வருகிறது. தென் சீன கடல் எல்லையை பகிர்ந்து கொள்ளும் வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகள் மீது சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது. சீனாவின் இந்த செயல் காரணமாக அங்கு பதற்றம் நிலவி வருகிறது. தென் சீனாவின் அருகே இருக்கும் கடல் பகுதியை மலேசியா, வியட்நாம், தைவான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடுகிறது.

சீனாவின் கவனத்திற்கு காரணம்
இங்கு அதிக அளவில் இருக்கும் எண்ணெய் வளம்தான் இதற்கு காரணம்.ஏற்கனவே இங்கு மலேசியாவும் எண்ணெய் எடுக்கிறது. சீனாவும் எண்ணெய் எடுக்கிறது. இந்த கடல் பகுதியை மொத்தமாக கட்டுப்படுத்த சீனா முயன்று கொண்டு இருக்கிறது. அதாவது மலேசியாவின் எண்ணெய் கிணறுகளை கட்டுப்படுத்த சீனா முயன்று கொண்டு இருக்கிறது. இதுதான் அங்கு சண்டைக்கு காரணம்.

அமெரிக்கா
இதில் எப்போதோ அமெரிக்கா உள்ளே நுழைந்து விட்டது. ஆமாம் ஒரு இடத்தில் எண்ணெய் இருந்தால் அங்கு அமெரிக்கா தலையிடாமல் இருக்குமா ?!. தென் சீன கடல் எல்லையில் சீனாவின் செயலுக்கு தடையாக அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு உதவி செய்தது. அங்கு அமெரிக்கா சீனாவிற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. முக்கியமாக அமெரிக்கா சீனாவிற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் வியாட்நாம், மலேசியாவிற்கு ஆதரவு அளித்து வருகிறது.

படைகள்
அங்கே அமெரிக்கா கடற்படையை அனுப்பி உள்ளது. அமெரிக்காவின் மூன்று போர் கப்பல்கள் அங்கே இருக்கிறது. அதேபோல் இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவிற்கு ஆதரவாக அங்கே இரண்டு போர் கப்பல்களை அனுப்பி உள்ளது. இந்த நிலையில்தான் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தென் சீன கடல் எல்லையில் சீனாவின் கடற்படை தீவிரமான போர் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. சீனாவின் இந்த செயல் காரணமாக தென்சீன கடல் எல்லையில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.

ஐந்து நாள் பயிற்சி
மொத்தமாக ஐந்து நாட்கள் கடற்படை போர் பயிற்சியை சீனா அங்கே செய்ய உள்ளது. அமெரிக்கா, மலேசியா, வியட்நாம், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை நடுங்க வைக்கும் வகையில் சீனா தீவிரமாக போர் ஒத்திகையை செய்து வருகிறது. தனது நவீன போர் கப்பல்களை வைத்து அங்கு தீவிரமாக சீனா போர் பயிற்சிகளை செய்து வருகிறது. அதிலும் வியட்நாம் பகுதியில் எல்லை மீறி சீனா பயிற்சிகளை செய்து வருகிறது.

புகார் என்ன
ஏற்கனவே ஏசியன் (ASEAN) குழுவில் இருக்கும் நாடுகளிடம் சீனாவிற்கு எதிராக வியட்நாம் புகார் அளித்துள்ளது. ஆசியா நாடுகள் இடையே சீனா பதற்றத்தை ஏற்படுத்துவதாக பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஏசியன் குழுவில் புகார் அளித்துள்ளது. ஏசியன் (ASEAN) என்பது இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், கம்போடியா, மியான்மர், புருனோய், லாவோஸ் ஆகிய நாடுகள் கொண்ட கூட்டமைப்பு ஆகும்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications