காலாவதியான தயாரிப்புப் பொருட்கள் – சிக்கலில் சீன மெக் டொனால்ட்ஸ், கேஎப்சி நிறுவனங்கள்
ஷாங்காய்: சீனாவில் காலாவதியான உணவுப் பொருட்களைப் பயன்படுத்திய மெக் டொனால்ட்ஸ் மற்றும் கேஎப்சி மேல் சீன அரசாங்கம் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சீன அரசு சமீப காலத்தில் உணவுத்துறையில் நடைபெற்று வரும் ஊழல்கள் குறித்து கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகின்றது.
அங்குள்ள உணவு நிறுவனங்களின் ஊழல்கள் மக்களிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தி வருகின்றது.

குற்றச்சாட்டில் உணவகங்கள்:
இந்நிலையில் அங்கு அமைந்துள்ள மேற்கத்திய துரித உணவகங்களான மெக்டொனால்ட்ஸ், கேஎப்சி, பீட்ஸா ஹட் போன்ற நிறுவனங்கள் புதிய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளன.

காலவதியான உணவுகள்:
இந்த நிறுவனங்களுக்கு மூலப் பொருட்களை சப்ளை செய்யும் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த அரோரா ஓஎஸ்ஐ குழுமத்தைச் சேர்ந்த ஹுசி என்ற நிறுவனம் காலாவதியான மாட்டிறைச்சி மற்றும் கோழி வகைகளை மறுதேதியிட்டு விற்பனை செய்துள்ளதாக சீனத் தொலைக்காட்சி நேற்று செய்தி வெளியிட்டது.

கடுமையான விதிமுறைகள்:
இதற்காக கடுமையான விதிமுறைகள் அனுசரிக்கப்படுகின்றன, சட்ட விரோத நடவடிக்கைகள் சகித்துக்கொள்ளப்படமாட்டாது என்று இந்நிறுவனங்கள் ஏற்கனவே தங்களது இணையதளத் தகவலில் தெரிவித்துள்ளன. ஆனாலும், இந்த உணவுப் பொருட்களைப் பயன்படுத்தியுள்ளன.

சாசேஜ்களும் நிறுத்தம்:
ஹுசி நிறுவனம் தங்களுக்கு விற்பனை செய்துவந்த சாசேஜ் வகைகளை நிறுத்திவிட்டதாக தைவானின் டிங் சின் சர்வதேச குழுமம் தெரிவித்துள்ளது.

கொள்முதல் நிறுத்தம்:
ஹுசி நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த கொள்முதல் பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அந்த வியாபார மையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள ஷாங்காய் அலுவலகம் காவல்துறையுடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

விசாரணைப் பிடி:
மேலும், இப்பொருட்களைப் பயன்படுத்திய மெக் டொனால்ட் மற்றும் கேஎப்சி நிறுவனங்களும் விசாரணைக்கு ஆளாகியுள்ளன.












Click it and Unblock the Notifications