அய்யோ பாவம்.. அதிகரிக்கும் கொரோனா.. சரித்திரத்தில் முதல் முறையாக தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் சீனா

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா பரவல் அதி உச்சத்தை எட்டியுள்ள நிலையில் அந்நாட்டின் சரித்திரத்தில் முதல் முறையாக கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்கிறதாம்.

ஒட்டுமொத்த உலக நாடுகளை கடந்த 3 ஆண்டுகளாக பேரழிவுக்கு தள்ளிவிட்டது கொரோனா வைரஸ். 2019-ம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவியது இந்த கொரோனா வைரஸ். பல லட்சம் மக்களை காவு கொண்ட இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில மாதங்களாக குறைவாக இருந்தது.

China to import Covid19 Vaccine from Germany

தற்போது சீனாவில் மீண்டும் அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவ தொடங்கிவிட்டது. அதுவும் ஒரே நேரத்தில் பலருக்கும் பரவக் கூடிய உருமாறிய கொரோனா வைரஸ்தான் தற்போதைய பரவலுக்கு காரணம் என கண்டறியபப்ட்டுள்ளது. இந்த உருமாறிய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவத் தொடங்கியிருக்கிறது.

சீனாவில் கொரோனா மரணங்களும் அதிகரித்துள்ளன. சீனாவின் மயானங்களில் சடலங்கள் கொத்து கொத்தாக தகனம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சீனாவில் கொரோனா தடுப்பூசி போட விரும்புவோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாம். ஆனால் சீனாவின் கையிருப்பில் போதுமான தடுப்பூசி இல்லையாம். இதனையடுத்து அதனது சரித்திரத்தில் முதல் முறையாக கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய இருக்கிறதாம் சீனா. ஜெர்மனியில் இருந்து முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்யப் போகிறதாம் சீனா. சீனாவில் 20,000 ஜெர்மனியர்கள் வசிக்கின்றனர்.

China to import Covid19 Vaccine from Germany

சீனாவின் நிலைமை குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கவலை தெரிவித்துள்ளார். மேலும் உலகின் பல நாடுகளில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. ஆனால் சில நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. சீனாவின் நிலைமை கவலை தருகிறது. சீனாவில் கொரோனா பாதிப்பு பற்றிய விவரங்களையும் ஆய்வு தகவல்களை வழங்க வேண்டும் என கேட்டிருக்கிறோம் என்றார்.

சீனா சமூக வலைதளங்களில் கொரோனா கால துயரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தகவல்கள் டிரெண்டிங்காகவும் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. தற்போதைய நிலையில் சீனாவில் பிஎப் 7 என்ற உருமாறிய ஓமிக்ரான் வைரஸ்தான் அதிகமாக பரவி வருகிறது. இதுதான் ஒருநாள் பாதிப்புகளையும் மரணங்களையும் அதிகரிக்க செய்கிறது. சீனாவில் அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் தொடர்ந்து வருவதால் இந்த எண்ணிக்கைகள் பல மடங்கு அதிகரிக்கலாம் என்கிற அச்சம் நிலவுகிறது. இதனையே மருத்துவ வல்லுநர்களும் வெளிப்படுத்தி வருகின்றனர். அதுவும் அடுத்த 3 மாதங்களில் கொரோனா 3 கட்டங்களாக அதாவது 3 அலைகளாகத் தாக்கும்; பல லட்சம் பேர் மரணம் அடைவார்கள் என்கின்றனர் வல்லுநர்கள். ஒட்டுமொத்த சீனாவில் 60% பேர், உலக நாடுகளின் மக்கள் தொகையில் 10% பேர் அடுத்த 3 மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவர் என்பதும் வல்லுநர்கள் எச்சரிக்கை.

இதனைத் தொடர்ந்தே இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டும் வருகின்றன. இந்தியாவில் பிரதமர் மோடியும் இன்று இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்திய மருத்துவ வல்லுர்கள் முக கவசம் அணிதல், பொது இடங்களில் ஒன்று கூடுதலைத் தவிர்த்தல் உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+