தென் சீனா கடற்பரப்பில் அமெரிக்கா கண்காணிப்பு விமானங்களை விரட்டியடித்த சீனா கடற்படை!!
பெய்ஜிங்: சர்ச்சைக்குரிய தென் சீனா கடற்பகுதியில் அமெரிக்க கண்காணிப்பு விமானத்தை சீனா கடற்படை விரட்டி அடித்து எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் சீனா கடல் பகுதியில் சீனாவுக்கும், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வருகிறது. இதனிடையே சர்ச்சைக்குரிய ஸ்பிரேட்லி தீவில் கட்டுமானப்பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது.
முதல் கட்டமாக அங்கு விமான ஓடுதளத்தை அமைத்து உள்ளதாக அமெரிக்கா ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. மேலும் அப்பகுதியில் கண்காணித்து வந்த பிலிப்பைன்ஸ் நாட்டின் விமானப்படை விமானத்தை சீனா எச்சரிக்கை விடுத்து அனுப்பியது.
இந்நிலையில்தான் தென் சீனா கடற்பகுதியில் அமெரிக்க கண்காணிப்பு விமானமானது சுமார் 8 முறை நுழைய முயன்றது; இதற்கு பதிலடியாக சீனாவின் கடற்படை எச்சரிக்கை விடுத்து திருப்பி அனுப்பியது.
சீனாவின் கடற்படை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அமெரிக்காவின் கண்காணிப்பு விமானமானது சர்வதேச வான்பகுதிக்கு சென்றுவிட்டது. இச்சம்பவம் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே புதிய பிரச்சனையை கிளப்பக் கூடும் என தெரிகிறது