சீனாவில் கிணற்றில் தவறி விழுந்த பெண் 15 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு
பெய்ஜிங்: சீனாவில் கிணற்றில் தவறி விழுந்த பெண் ஒருவர் வெளியே வர முடியாமல் அங்கேயே 15 நாட்கள் சிக்கித் தவித்துள்ளார்.
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜோங்ஃபெங் கிராமத்தைச் சேர்ந்தவர் சு சிசியூ(38). அவர் 12 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணற்றில் கடந்த 1ம் தேதி தவறி விழுந்துவிட்டார். அந்த கிணற்றைச் சுற்றி உயரமான சோளக் கருதுகள் இருப்பதால் அவர் விழுந்து தவித்தது யாருக்கும் தெரியவில்லை.
இந்நிலையில் சூவை காணாமல் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து ஒரு வழியாக அவர் கிணற்றுக்குள் விழுந்தது 15 நாட்கள் கழித்து கடந்த திங்கட்கிழமை கண்டுபிடித்தனர். உடனே இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் வந்து சூவை மீட்டனர்.
அவர் கிணற்றுக்குள் விழுந்த சோளத்தை சாப்பிட்டு, மழை நீரை குடித்து உயிர் வாழ்ந்துள்ளார். அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் அவரால் வாயைத் திறந்து பேசவோ, சாப்பிடவோ முடியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் தென்மேற்கு சீனாவில் உள்ள ஒரு கிணற்றில் விவசாயி ஒருவர் தவறி விழுந்தார். அவரை காப்பாற்ற 4 பேர் கிணற்றில் குதித்தனர். ஆனால் அவர்கள் 5 பேரும் வெளியே வர முடியாமல் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications