பாலைவனத்தை குறி வைத்து.. சீறிப்பாய்ந்த ஏவுகணைகள்.. சீனா நடத்திய "லைவ் - போர் பயிற்சி".. ஷாக்கிங்!
பெய்ஜிங்: இந்தியாவுடன் மோதல் நிலவி வரும் நிலையில் தற்போது சீனா தனது வடமேற்கு பிராந்தியத்தில் அதிரடியாக ஏவுகணை சோதனையை செய்துள்ளது.
இந்தியா - சீனா இடையிலான மோதல் இப்போதைக்கு முடிவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. லடாக்கில் இரண்டு நாட்டு படைகளும் போர் வீரர்களை குவித்து வருகிறது.அதேபோல் எல்லையில் நவீன ஆயுதங்கள் குவிக்கப்பட்டு வருகிறது.
இன்னொரு பக்கம் இரண்டு நாட்டு விமான படைகளும் எல்லையில் போர் விமானங்கள், ஏவுகணைகளை குவித்து வருகிறது. இந்தியாவும் இன்று பிரான்சிடம் இருந்து 5 ரபேல் விமானங்கள் வாங்குகிறது. இந்திய விமானப்படையில் இந்த ரபேல் விமானங்கள் அதிகாரபூர்வமாக இணைக்கப்படுகிறது.

ஏவுகணை சோதனை
இந்த நிலையில்தான் சீனா தற்போது ஏவுகணை சோதனையை செய்துள்ளது. அதன்படி சீனாவின் பிஎல்ஏ ராணுவத்தின் 75வது படைப்பிரிவு இந்த ஏவுகணை சோதனையை செய்துள்ளது. சீனாவின் வடமேற்கு பகுதியில் இருக்கும் பாலைவனத்தில் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது. டக்லமாக்கான் பாலை வனத்தில் இந்த சோதனை நடைபெற்று உள்ளது. நேற்று மாலையில் இருந்து இரவு வரை சோதனை நடந்துள்ளது.

இரண்டு வகை
மொத்தம் இரண்டு விதமாக இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி சீனா புதிதாக உருவாக்கிய ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதிக வேகத்தில் சென்று தாக்கும் சிறிய சிறிய ஏவுகணைகளை சீனா உருவாக்கி உள்ளது. இந்த ஏவுகணைகள் நேற்று சோதனை செய்யப்பட்டது. சீன ராணுவத்தில் இந்த ஏவுகணைகள் இன்னும் இணைக்கப்படவில்லை. இந்த நிலையில் இதன் சோதனை நடந்துள்ளது.

இரண்டாவது சோதனை
இன்னொரு பக்கம் சீனா தனது பழைய ஏவுகணைகளை வைத்து போர் பயிற்சிகளை செய்துள்ளது. தீவிர லைவ் போர் பயிற்சியை சீனா அங்கு செய்துள்ளது. இதற்காக சீனாவின் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் அங்கே கொண்டு வரப்பட்டது. ஏவுகணைகளை ஏவி, சரியாக இலக்குகளை தாக்கி சீனா இந்த பயிற்சிகளை செய்துள்ளது. நான்கு மணி நேரம் சீனா இந்த போர் பயிற்சியை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏன் சோதனை
இந்தியாவுடன் மோதல் நிலவி வரும் நிலையில் இந்த ஏவுகணை சோதனை முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதே சமயம் இந்த ஏவுகணை சோதனை முழுக்க முழுக்க இந்தியாவிற்கு எதிரான சோதனை மட்டும் இல்லை. தைவானுக்கும் சவால் விடும் வகையில் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல்நாள் சீனாவின் எல்லை அருகே தைவான் ஏவுகணை பயிற்சி மேற்கொண்டது.

தைவான் எப்படி
சீனாவின் எல்லைக்கு அருகே 10க்கும் அதிகமான புதிய ஏவுகணைகளை தைவான் சோதனை செய்தது. அமெரிக்காவின் உதவியுடன் தைவான் இந்த சோதனையை செய்தது. இதன் காரணமாக கோபம் அடைந்த சீனா அங்கு போர் விமானங்களை அனுப்பி உள்ளது. இதனால் தற்போது சீனா எல்லையில் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. இதன் காரணமாக எல்லையில் பதற்றம் அதிகரிக்க தொடங்கி உள்ளது .
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications