காற்றை விற்கும் கனடா வியாபாரிகள்.. பாட்டிலில் அடைத்து வாங்கும் பரிதாப சீனர்கள்!
பீஜிங்: காற்று மாசு அதிகரித்து விட்டதால், கனடா நிறுவனம் ஒன்றிடமிருந்து இருந்து சுத்தமான காற்று அடைக்கப்பட்ட பாட்டில்களை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது சீனா.
உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ளது சீனா. வாகனங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் வெளியேறுகின்ற புகை நாளுக்கு நாள் அங்கு அதிகரித்து வருகிறது. இதுதவிர குளிர்காலத்தில் வீடுகளில் குளிர் காய்வதற்கு நிலக்கரி எரிப்பதால் வெளியேறுகிற புகையாலும் அங்கு காற்று கடும் மாசு அடைந்துள்ளது.
இதுவரை இல்லாத அளவு தற்போது அங்கு பனிப்புகையும் ஏற்பட்டுள்ளது. இதனால் சீனர்கள் பெரும் அவஸ்தைக்கும், உடல் நலிவுக்கும் உள்ளாகி வருகிறார்கள்.

அபாய எச்சரிக்கை...
இதன் தொடர்ச்சியாக இம்மாத தொடக்கத்திலேயே பெய்ஜிங்கில் காற்று மாசு காரணமாக அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் தலைநகரில் பள்ளிகள் மூடப்பட்டன. கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

தூய்மையான காற்று...
இந்நிலையில், தொடர்ந்து மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு ஆளாகிவரும் சீனமக்கள், தூய்மையான காற்றை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கனடா நிறுவனம்...
இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கனடா நாட்டு நிறுவனம் ஒன்று, அங்குள்ள பான்ப் மற்றும் லேக் லூயிஸ் ஆகிய மலைகளிலிருந்து பெறப்பட்ட தூய்மையான காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது.

பாட்டிலில் காற்று...
பாட்டிலில் அடைக்கப்பட்டுள்ள இந்த காற்று இந்திய மதிப்பின்படி ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பான்ப் மலையின் காற்று இன்னும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இந்த காற்று 10 மணி நேரம் வரை தூய்மையானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லிக்கும் வருமா...
டெல்லியும் இப்போது புகை மாசால் பெரும் அவதிப்பட்டு வருகிறது. எனவே கனடாக்காரர்கள் இங்கும் கிளை பரப்பி காற்றை விற்பார்களா என்று தெரியவில்லை.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications