கொரோனா இருப்பதாக சந்தேகம்.. ஃபிளாட்டில் வைத்து தன்னை தானே பூட்டிக் கொண்ட சீன இளைஞர்.. நொய்டாவில்!
பெய்ஜிங்: கொரோனா வைரஸ் இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் கிரேட்டர் நொய்டாவில் ஒரு குடியிருப்பில் தன்னை தானே பூட்டிக் கொண்டு உள்ளே இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
சீனாவில் கொரோனா வைரஸ் பரவி நாடு முழுவதும் உயிரிழப்பையும் பீதியையும் அதிகரித்து வருகிறது. சீனாவை காட்டிலும் மற்ற நாடுகளில் இந்த வைரஸ் அதிகமாக பரவுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசும் கொரோனா வைரஸை எதிர்கொள்ள போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் இந்த நோய் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி விட்டது. இதில் மிகவும் மோசமாக தென்கொரியா, பிரான்ஸ், இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் அடங்கும். உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இந்த கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க அந்தந்த நாடுகள் பயணம் மேற்கொள்வதில் கட்டுப்பாடு விதித்துள்ளன. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளன.
கொரோனா வைரஸ் பிறப்பிடமான சீனாவில் 3000-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் கிரேட்டர் நொய்டாவில் சீன இளைஞர் ஒருவர் தங்கியுள்ளார்.
அவர் ஓப்போ செல்போன் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் அவர் தங்கியிருந்த குடியிருப்பில் வைத்து தன்னை தானே பூட்டிக் கொண்டார். இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் அவர்கள் அந்த இடத்துக்கு வந்தடையவில்லை.
இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் கிரேட்டர் நொய்டா போலீஸ் நிலையத்திற்கு வந்து முறையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications