நூற்றாண்டுகளுக்கு பிறகு ஏசுவின் கல்லறை திறப்பு! ஜெருசலத்தில் நடக்கிறது சீரமைப்பு
ஏசு நாதர் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் ஜெருசலத்திலுள்ள கல்லறை பல வருடங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. அதில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஜெருசலம்: கிறிஸ்தவ மத நம்பிக்கைபடி ரோமானியர்களால் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்ட ஏசு கிறிஸ்து, கல்லரையொன்றில் புதைக்கப்பட்டார். 3வது நாளில் அவர் உயிர்த்தெழுந்தார். அவரது உடல் கூட அங்கு இல்லை என்பது கிறிஸ்தவ மத நம்பிக்கையாகும்.
கிறிஸ்தவர்கள் நம்பும் இந்த கல்லரை ஜெருசலம் நகரில் உள்ளது. அங்கு ஒரு சர்ச்சும் கட்டப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன. ஏசு கிறிஸ்து கி.பி. 30ல் சிலுவையில் அறையப்பட்டார் என கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். இந்நிலையில், கடந்த 1808-1810ல் தீப்பிடித்து நாசமான பின்னர் சீரமைக்கப்பட்ட கல்லறையை தற்போது, தலைமை அறிவியல் பேராசிரியர் அண்டோனியா மோரபொலவ் வழிகாட்டுதலின் கீழ், ஏதென்ஸ் தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு மறுசீரமைத்து வருகின்றது.

முன்னதாக 1927ம் ஆண்டு நில நடுக்கத்தால் இக்கல்லறை பாதிக்கப்பட்டதாக தகவல் உண்டு. ஆனால் அப்போது சீரமைக்கப்படவில்லை.
கல்லறையின் மேல் இருந்த மார்பிள் கல் அகற்றப்பட்டு அதன் கீழ், இயேசுவின் உடல் கிடத்தப்பட்டதாக நம்பப்படும் கல்லை அறிவியல் ஆராய்ச்சிகளுக்குப் பிறகு பார்க்க உள்ளார்கள். இது குறித்த நிகழ்வை நேஷனல் ஜியாகிராபிக் சேனல் படம் பிடித்துள்ளது.
பாதிரியார் அதானசியஸ் மகோரா கூறுகையில், தனிப்பட்ட முறையில் இக்கல்லரையை புதுப்பிக்க எனக்கு ஆசைதான். ஆனால், பாரம்பரியத்தை கருத்தில் கொண்டு அப்படியே விட்டுவிட எண்ணியுள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications