இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்: லாஸ் ஏஞ்சல்ஸில் பள்ளிகள் மூடல்
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து அங்குள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பள்ளிகளுக்கு தீவிரவாதிகள் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து அங்குள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அனைத்து பள்ளி பேருந்துகளும் பள்ளிகளுக்கு உடனே திரும்பி வரவேண்டும் என்றும், பெற்றோர்கள் யாரும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் டிஸ்ட்ரிக் என்ற மிகப்பெரிய பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 6 லட்சத்திற்கும் அதிமான மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில், அந்த பள்ளியின் நிர்வாகத்திற்கு இ-மெயில் வந்துள்ளது. அதில் பள்ளி மீது தாக்குதல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்நாட்டு புலனாய்வு போலீசார் பள்ளியை முற்றுகையிட்டு உஷார்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்தில் சான் பெர்னார்டினோவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிறகு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் தீவிரவாத அச்சுறுத்தல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications