Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மார்க் வேணுமா.. அப்படீன்னா என்னோடு வா.. மாணவர்களை அனத்திய ஆசிரியைக்கு 40 ஆண்டு சிறை!

தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற வேண்டும் எனில் தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என்று மாணவர்களை கட்டாயப்படுத்திய ஆசிரியை கைதானார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மார்க் வேணுமா.. அப்படீன்னா என்னோடு வா..ஆசிரியைக்கு 40 ஆண்டு சிறை!- வீடியோ

    கொலம்பியா: தேர்வில் அதிக மதிப்பெண் பெறவேண்டும் எனில் தன்னுடன் உறவில் ஈடுபட வேண்டும், தனது கவர்ச்சி படங்களை பார்க்க வேண்டும் என்று மாணவர்களை நிர்பந்தப்படுத்திய கொலம்பியா நாட்டு ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

    அவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கொலம்பியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. யொகாஸ்டா என்ற அந்த ஆசிரியை, கொலம்பியா நாட்டின் 2வது பெரிய நகரான மெடலினிலுள்ள பள்ளியில் ஆசிரியையாக பணி செய்து வந்தார்.

    அந்த பள்ளியில் படிக்கும் 16,17வயது மாணவர்களுக்கு தனது கவர்ச்சி புகைப்படங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பி வைப்பார் யொகாஸ்டா. அந்த படங்களை பார்ப்பதோடு மட்டுமல்லாது தன்னுடைய ஆசைக்கும் இணங்க வேண்டும் என்றும் வற்புறுத்தி வந்துள்ளார் ஆசிரியை.

    மாணவர்களுடன் உறவு

    மாணவர்களுடன் உறவு

    நீண்ட நாட்களாக இந்த விசயம் வெளியே தெரியாமல் இருந்துள்ளது. அதிக மதிப்பெண் வேண்டுமென்றால் தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என்று பல மாணவர்களை வற்புறுத்தியுள்ளார் யொகாஸ்டா.

    ஆசிரியை பாலியல் தொந்தரவு

    ஆசிரியை பாலியல் தொந்தரவு

    வாட்ஸ் அப் மூலம் கவர்ச்சி படங்களை அனுப்பியதோடு மாணவர்களை சிறப்பு வகுப்பு என்று கூறி வீட்டுக்கு அழைத்து பாலியல் உறவில் ஈடுபட்டதாக ஆசிரியை மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

    செல்போனில் ஆபாச படம்

    செல்போனில் ஆபாச படம்

    கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை இதுபோல் 40 மாணவர்களிடம் தவறாக நடந்துள்ளார் ஆசிரியை. இந்த நிலையில் ஒரு மாணவனின் செல்போனில் ஆசிரியையின் ஆபாசப்படங்களைப் பார்த்த தந்தை ஒருவர் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து உடனடியாக ஆசிரியை மீது புகார் அளித்தார்.

    சிறையில் ஆசிரியை

    சிறையில் ஆசிரியை

    காவல்துறையினர் ஆசிரியையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆசிரியை மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கொலம்பியா நீதிமன்றம் உத்தரவிட்டது.

    கணவரும் பிரிந்தார்

    கணவரும் பிரிந்தார்

    ஆசிரியை யொகாஸ்டாவின் கணவர் தனது மனைவியின் உண்மை சொரூபத்தை உணர்ந்து உடனடியாக விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார். பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவர்களை மிரட்டி பாலியல் உறவில் ஈடுபட்ட சம்பவம் கொலம்பியா நாட்டு ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+