அரபு நாடுகளுக்கு தனி 'இன்டர்போல்', கப்பல் படை! கூட்டமைப்பு மாநாட்டில் முடிவு!!
தோஹா: இன்டர்போல் போன்ற பாணியில் அரபு நாடுகள் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் தங்களுக்கென்று பொதுவான காவல்துறையையும், பொதுவான கடல்படையையும் நிறுவ முடிவு செய்துள்ளன.
பக்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இணைந்து 'வளைகுடா அரபு நாடுகளுக்கான கூட்டுறவு கவுன்சில்' (GCC) என்ற அமைப்பை 1981ம் ஆண்டு ஏற்படுத்தியிருந்தன.

உச்சி மாநாடு
இந்த அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு கத்தார் நாட்டு தலைநகர் தோஹாவில் நடந்தது. இக்கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

போலீஸ் படை
கூட்டத்தில் இரு முக்கியமான முடிவுகள் இரண்டு எடுக்கப்பட்டுள்ளன. இன்டர்போல் பாணியில், இக்கூட்டமைப்பில் உள்ள அரபு நாடுகளுக்காக பொதுவான காவல்துறையை உருவாக்க இக்கூட்டம் முடிவு செய்துள்ளது. இதற்கு GCC-Pol என்று பெயர் சூட்டப்படும்.

அபுதாபி தலைமையிடம்
கத்தார் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷேக் காலித் பின் முகமது அல் அட்டியா கூறுகையில் "இந்த போலீஸ் படை தீவிரவாதத்திற்கு எதிராக போராடும். இன்டர்போல் போல வளைகுடா நாடுகளில் இந்த போலீஸ் படை செயல்படும்" என்றார். இந்த போலீஸ் படை அபுதாபியை தலைமையிடமாக கொண்டு இயங்கப்போகிறது.

பொதுவான கடற்படை
மேலும், அனைத்து உறுப்பு நாடுகளுக்குமான பொதுவான கடற்படை பக்ரைனை தலைமையிடமாக கொண்டு அமைய உள்ளது. இருப்பினும் கப்பல்படை குறித்த மேலதிக தகவல்களை வெளியிட இக்கூட்டமைப்பு மறுத்துவிட்டது.

தீவிரவாதத்தை முறியடிக்க திட்டம்
மேலும், எகிப்து நாட்டு அரசுக்கு ஜிசிசி நாடுகள் முழு ஆதரவை அளிக்கும் என்றும் இக்கூட்டத்தில் ஒரு மனதாக முடிவெடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாட்டில் வளர்ந்து வரும் தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள உறுப்பு நாடுகள் இணைந்து செயல்படுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கூட்டு ராணுவம் தேவை
நேட்டோ படைகளை போல வளைகுடா நாடுகளும் 1 லட்சம் வீரர்களை கொண்ட கூட்டு ராணுவ படையை உருவாக்க வேண்டும் என்று சவுதி அரேபியா கடந்த ஆண்டு முதலே கோரிக்கை விடுத்துவருகிறது. ஏற்கனவே பெனிசுலா ஷீல்டு என்ற பெயரில் ஒரு போலீஸ் கூட்டமைப்பை ஜிசிசி நாடுகள் அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications