அரபு நாடுகளுக்கு தனி 'இன்டர்போல்', கப்பல் படை! கூட்டமைப்பு மாநாட்டில் முடிவு!!
தோஹா: இன்டர்போல் போன்ற பாணியில் அரபு நாடுகள் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் தங்களுக்கென்று பொதுவான காவல்துறையையும், பொதுவான கடல்படையையும் நிறுவ முடிவு செய்துள்ளன.
பக்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இணைந்து 'வளைகுடா அரபு நாடுகளுக்கான கூட்டுறவு கவுன்சில்' (GCC) என்ற அமைப்பை 1981ம் ஆண்டு ஏற்படுத்தியிருந்தன.

உச்சி மாநாடு
இந்த அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு கத்தார் நாட்டு தலைநகர் தோஹாவில் நடந்தது. இக்கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

போலீஸ் படை
கூட்டத்தில் இரு முக்கியமான முடிவுகள் இரண்டு எடுக்கப்பட்டுள்ளன. இன்டர்போல் பாணியில், இக்கூட்டமைப்பில் உள்ள அரபு நாடுகளுக்காக பொதுவான காவல்துறையை உருவாக்க இக்கூட்டம் முடிவு செய்துள்ளது. இதற்கு GCC-Pol என்று பெயர் சூட்டப்படும்.

அபுதாபி தலைமையிடம்
கத்தார் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷேக் காலித் பின் முகமது அல் அட்டியா கூறுகையில் "இந்த போலீஸ் படை தீவிரவாதத்திற்கு எதிராக போராடும். இன்டர்போல் போல வளைகுடா நாடுகளில் இந்த போலீஸ் படை செயல்படும்" என்றார். இந்த போலீஸ் படை அபுதாபியை தலைமையிடமாக கொண்டு இயங்கப்போகிறது.

பொதுவான கடற்படை
மேலும், அனைத்து உறுப்பு நாடுகளுக்குமான பொதுவான கடற்படை பக்ரைனை தலைமையிடமாக கொண்டு அமைய உள்ளது. இருப்பினும் கப்பல்படை குறித்த மேலதிக தகவல்களை வெளியிட இக்கூட்டமைப்பு மறுத்துவிட்டது.

தீவிரவாதத்தை முறியடிக்க திட்டம்
மேலும், எகிப்து நாட்டு அரசுக்கு ஜிசிசி நாடுகள் முழு ஆதரவை அளிக்கும் என்றும் இக்கூட்டத்தில் ஒரு மனதாக முடிவெடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாட்டில் வளர்ந்து வரும் தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள உறுப்பு நாடுகள் இணைந்து செயல்படுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கூட்டு ராணுவம் தேவை
நேட்டோ படைகளை போல வளைகுடா நாடுகளும் 1 லட்சம் வீரர்களை கொண்ட கூட்டு ராணுவ படையை உருவாக்க வேண்டும் என்று சவுதி அரேபியா கடந்த ஆண்டு முதலே கோரிக்கை விடுத்துவருகிறது. ஏற்கனவே பெனிசுலா ஷீல்டு என்ற பெயரில் ஒரு போலீஸ் கூட்டமைப்பை ஜிசிசி நாடுகள் அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications