ஆரம்பம்.. புலிகள், கரடிகளுக்கு கொரோனா டெஸ்ட் + தடுப்பூசி.. அமெரிக்காவில் விறுவிறு நடவடிக்கை
அமெரிக்காவில் மிருகங்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது
சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில், சிங்கம், கரடி, மர நாய்கள் உள்ளிட்ட மிருகங்களுக்கு டெஸ்ட் செய்யப்பட்டு, கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ளது ஓக்லாண்ட் மிருக காட்சி சாலை ஒன்று உள்ளது.. இங்குதான், புலிகள் மற்றும் கரடிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன...

இவற்றில், ஜிஞ்சர் மற்றும் மோலி என பெயரிடப்பட்ட 2 புலிகளுக்கு இந்த வாரத்தில்தான், முதல்முறையாக, தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. இதற்கு பிறகு கரடிகள், மலை சிங்கங்கள், மரநாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கும் டெஸ்ட் செய்யப்பட்டு, அந்த ரிசல்ட் அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இதை பற்றி அந்த மிருக காட்சி சாலையின் துணை தலைவர் அலெக்ஸ் ஹெர்மான் சொல்லும்போது, எந்த விலங்கிற்கும் இதுவரை தொற்று ஏற்படவில்லை... ஆனால் முன்னெச்சரிக்கையாக இருக்க முடிவு செய்துள்ளோம்... சமூக இடைவெளி கடைப்பிடிப்பது மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பு உடைகளை அணிவது ஆகியவை பின்பற்றப்படுகிறது" என்றார்.
கடந்த ஜனவரியில் சான் டீகோ மிருக காட்சி சாலையில் கொரில்லாக்களுக்கு தான் முதலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.. அப்போதே தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின... கொரில்லாக்கள், புலிகள் மற்றும் சிங்கங்களுக்கு தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டு உள்ளது... இதேபோன்று வீட்டில் வளர கூடிய பூனைகள், நாய்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications