ஆஹா.. முதல்முறையாக.. சீனாவின் வுகானில் யாருக்கும் கொரானா வைரஸ் பாதிப்பில்லை
பெய்ஜிங்: சீனாவின் வுகானில் முதல்முறையாக ஒரு நாளில் யாருக்குமே கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இதன் மூலம் கொரோனா பாதிப்பை சீனா பெருமளவில் கட்டுப்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு கொரானாவால் உயிரிழப்பதும் வெகுவாக குறைந்துள்ளது.
Recommended Video
உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று நோய் என்பதுடன் எப்படி, யார் மூலமாக வேண்டுமானாலும் பரவும் என்பதால் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 8758 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சீனாவில் தான் அதிகம் பேர் உயிரிழந்தனர். இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 200,000 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் சுமார் 3000 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை உயிரிழந்துள்ளனர். அங்கு நேற்று ஒரே நாளில் 475 பேர் பலியாகி உள்ளனர்,
ஆனால் சீனாவில் கொரோனா வைரஸ் வெடிப்பின் மையப்பகுதியான மத்திய சீன நகரமான வுஹானில் முதல் முறையாக புதிததாக யாருக்கும் கொரானா வைரஸ் தொற்று ஏற்படவில்லை. அதேநேரம் நாட்டின் பிறபகுதியில் இருந்து வந்தவர்கள் தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. சீனாவில் ஒட்டுமொத்தமாக 34 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதில் பெய்ஜிங்கில் மட்டும் 21 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சீன சுகாதார அமைச்சகம் வெளியிட்ட கணக்குப்படி 80,928, பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை 3245 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிந்துள்ளனர். வுகான் நகரம் அமைந்துள்ள ஹுபே மாகாணத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் நேற்று 8 பேர் புதிதாக இறந்துள்ளனர். அதேபோல் வுகானிலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications