கொரோனா அச்சத்தால் தனிமைப்படுத்திக் கொள்வதாக ஜெர்மன் அதிபர் ஏஞ்சலினா மெர்கல் அறிவிப்பு
பெர்லின்: கொரோனா அச்சத்தால் தம்மை தனிமைப்படுத்திக் கொள்வதாக ஜெர்மன் அதிபர் ஏஞ்சலினா மெர்கல் அறிவித்துள்ளார்.
Recommended Video
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலினா மெர்கலுக்கு அண்மையில் காய்ச்சலுக்கான தடுப்பூசி போடப்பட்டது. இந்த தடுப்பூசியை செலுத்திய மருத்துவர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
இத்தகவல் அதிபர் ஏஞ்சலினா மெர்கலுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தம்மை அதிபர் ஏஞ்சலினா மெர்கல் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும் வீட்டில் இருந்தே ஏஞ்சலினா மெர்கல் அனைத்து பணிகளையும் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மனியிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
கொரோனா அச்சம்- கொலம்பியா சிறையில் பயங்கர மோதல்- 23 பேர் பலி
ஜெர்மனியில் கொரோனாவுக்கு இதுவரை 90க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஜெர்மனியில் கொரோனா வேகமாக பரவி வருகிறது என ஏஞ்சலினா மெர்கல் கவலையும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.