Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடு ரோட்டிலே.. யாருமற்ற நேரத்திலே.. லாக்டவுனையும் கண்டுக்காம.. கொரோனாவுக்கும் பயப்படாம.. கசமுசா!

நடுரோட்டிலேயே அநாகரீகமாக நடந்து கொண்ட ஜோடி

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்து மக்கள் இந்த கசமுசா செய்தியை பார்த்து அதிர்ந்து போயுள்ளனர். கொரோனா குறித்த பயம் கொஞ்சம் கூட இல்லாமல், ஒரு ஜோடி நடு ரோட்டில், பார்க் ஒன்றில் செக்ஸ் வைத்துள்ளது. அந்த இடமானது, இங்கிலாந்து ராணி வசிக்கும் பக்கிங்காம் அரண்மனைக்கு வெகு அருகில் இருப்பதுதான் பெரிய கொடுமை!!

Recommended Video

    பேய்களை வெச்சு இந்தோனேசியா செம ஐடியா

    லண்டனில் செயின்ட் ஜேம்ஸ் பார்க் என்ற இடம் இருக்கிறது. மிகப் பெரிய பார்க் இது. பலரும் கூடுவார்கள். இதற்கு அருகில்தான் பிரபலமான பர்ட்கேஜ் நடை பாதைப் பூங்காவும் உள்ளது. அங்கு பலரும் வாக்கிங் போவார்கள். மேலும் பக்கிங்காம் அரண்மனையும் அருகிலேயே உள்ளது. இப்படிப்பட்ட இடத்தில்தான் இந்த ஜோடி எதைப் பற்றியும் கவலைப்படாமல் மும்முரமாக இயங்கியுள்ளது.

    coronavirus: lovers are caught misbehaving in st jamess park yards from buckingham palace

    தற்போது இங்கிலாந்து முழுவதும் கொரோனாவைரஸ் லாக்டவுன் அமலில் உள்ளது. இந்த நிலையில் இந்த பூங்காவில் வைத்து ஒரு ஜோடி கசமுசா வேலையில் இறங்கியுள்ளது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர்கள் ஜாலியாக இருந்துள்ளனர். அவர்கள் யார் என்ற அடையாளம் தெரியவில்லை. இவர்கள் இப்படி கிடப்பதைப் பார்த்து அந்தப் பக்கமாக போனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும் கண்டுக்காமல் போய் விட்டனர்.

    ஆனால் இவர்கள் இருவரும் அசிங்கம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்த குதிரைப்படை போலீஸார் இருவர் வேகமாக அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் வருவதைப் பார்த்த அந்த ஜோடி அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் போலீஸார் வந்து இப்படியெல்லாம் இருக்கக் கூடாது. சமூக இடைவெளியை கடைப்பிடிங்க என்று கூறியதைத் தொடர்ந்து இருவரும் போய் விட்டனர். இதை ஒருவர் வீடியோவில் படமாக்கி வெளியிட்டு வைரலாக்கி விட்டார்.

    கிட்டத்தட்ட பல நிமிடங்களுக்கு இந்த இருவரும் கொட்டமடித்துள்ளனர். பலர் இதைப் பார்த்தும் கூட பேசாமல் போய் விட்டதால் இந்த ஜோடியின் ஜோலி தொடர்ந்திருக்கிறது. பின்னர் யாரோ ஒருவர் கொடுத்த புகாரின் பேரில்தான் போலீஸார் வந்துள்ளனர். வந்த போலீஸார் அவர்களை கடுமையாக எச்சரிப்பார்கள் என்று பார்த்தால், சமூக இடைவெளியைக் கடைப்பிடிங்கப்பா.. இப்படியெல்லாம் பொதுவெளியில் செய்யக் கூடாது என்று கூறி விட்டு போய் விட்டனராம்.

    இதற்கிடையே, போலீஸ் தரப்பில் கூறுகையில், அந்த இருவரும் செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டதாக எங்களுக்குத் தெரியவில்லை. இதனால்தான் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு எங்களது அதிகாரிகள் எச்சரித்து விட்டுச் சென்றனர். அந்த இருவரும் தங்களுக்கு வீடு கிடையாது என்றும் தெரிவித்தனர். இதையடுத்து இலவச ஷெல்டர் தரும் ஏஜென்சியை அணுகுமாறு அவர்களுக்கு போலீஸார் அறிவுறுத்தலைக் கொடுத்தனர் என்றார்.

    போலீஸார் இப்படிக் கூறினாலும் கூட இந்த வீடியோவை எடுத்த நபர் வேறு மாதிரி கூறுகிறார். அந்த இருவரும் செக்ஸ் நடவடிக்கையில்தான் ஈடுபட்டிருந்தனர். அது நன்றாகவே தெரிகிறது. ஆனால் போலீஸார் ஏன் இப்படி நடந்து கொண்டனர் என்று தான் தெரியவில்லை என்று அவர் வியப்புடன் வெளியிட்டுள்ளார். . என்ன கருமமோ.. வீட்டுக்குள்ளேயே இருங்கப்பா புண்ணியமாப் போகும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+