பல நாடுகளில் மூடப்படும் பள்ளிகள்.. கல்வி கற்பதையே சீர்குலைத்த கொரோனா.. 30 கோடி குழந்தைகள் பாதிப்பு
ஜெனிவா: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் சுமார் 30 கோடி மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் ஒரு வாரமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
Recommended Video
சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரல் உலகம் முழுவதும் 62 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. கொரோனாவால் உயிரிழந்ததோர் எண்ணிக்கை 3 200ஐ தாண்டி உள்ளது. 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாள்தோறும் இந்த வைரஸ் பரவும் வேகம் மக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

இருமல் மற்றும் தும்மல் வழியாக பரவும் கொரோனா வைரஸ் தாக்குதலால் உலக முழுவதும் மக்கள் அச்சத்தில் உள்ளார்கள். பெரியவர்கள் சிறியவர்கள் என அனைவருக்கும் வேகமாக பரவி வரும் இந்த கொரோனா பாதிப்பால் உலகின் பல்வேறு நாடுகளில் கல்வி கற்பிப்பது சீர் குலைந்து போய் உள்ளது.
தொற்று நோயான கொரோனாவிற்கு மருந்து இல்லை என்பதால், பள்ளிக்கு மாணவ மாணவிகளைஅனுப்ப மக்கள் பயந்து போய் உள்ளார்கள். உலகம் முழுவதும் பல நாடுகளில் மக்கள் பள்ளிக்கு செல்லாமல் ஒரு வாரமாக வீடுகளில் முடங்கி கிடக்கிறார்கள். சுமார் 30 கோடி மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்ல வில்லை என்பது தெரியவந்துள்ளது. பல நாடுகளும் பள்ளிகளை மூடி உள்ளன.
ஏனெனில் சர்வதேச நாணய நிதியம் தொற்றுநோய்க்கு எதிரான முழுமையான, உலகளாவிய நடவடிக்கைகளை செயல்படுத்த வலியுறுத்தியது. இதன் அடிப்படையில் வைரஸ் பரவுவதை தடுக்க, மற்ற நாடுகளும் அசாதாரண நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளன.
யுனெஸ்கோ புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "13 நாடுகள் பள்ளிகளை மூடியுள்ளன, 290.5 மில்லியன் குழந்தைகள் பள்ளிக்கு செல்வது பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 9 நாடுகள் ஆங்காங்கே பள்ளிகளை மூடி உள்ளன. நெருக்கடிகளின் போது தற்காலிக பள்ளி மூடல்கள் புதியவை அல்ல என்றாலும், தற்போதைய கல்வி சீர்குலைவு என்பது உலக அளவில் அதிகமாக உள்ளது . இது வரை இல்லாது, இத்தகைய சூழல் நீடித்தால் கல்வி உரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும்" என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications