உலக அளவில் கொரோனா வைரஸ்.. புதிய நோயாளிகளின் எண்ணிக்கையில் 4வது இடத்திற்கு வந்த இந்தியா
ஜெனிவா: உலக அளவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவும் நாடுகள் பட்டியலில் 4வது இடத்திற்கு இந்தியா வந்துள்ளது. இந்தியாவில் நேற்று ஒரு நாளில் 6147 பேருக்கு தொற்று பரவியதாக கூறப்படுகிறது. இதன் மூலம் புதிய கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை அடுத்து 4வது இடத்திற்கு இந்தியா வந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகத்தில் பரவி வருகிறது. தற்போதைய நிலையில் 50 லட்சத்தை நெருங்கி வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 94751 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகிலேயே அதிகபட்சமாக நேற்று அமெரிக்காவில் 20289 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அங்கு கொரோனா பாதிப்பு 15,70,583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 93,553 பேர் உயிரிழந்துள்ளனர்.நேற்று ஒரு நாளில் 1,552 பேர் உயிரிழந்துள்ளனர்.

16517 பேருக்கு பாதிப்பு
பிரேசிலில் நேற்று புதிதாக கொரோனா பாதிப்பு 16,517 ஆக அதிகரித்தது. இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,71,885 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை பிரேசிலில் கொரோனா பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 17,983 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 1,130 பேர் உயிரிழந்துள்ளனர்.

9263 பேருக்கு பாதிப்பு
மூன்றாவது இடத்தில் ரஷ்யா உள்ளது.இங்கு நேற்று புதிதாக 9263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,99,941 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ரஷ்யாவில் கொரோனாவால் 2,837 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு நேற்று மட்டும் 115 பேர் உயிரிழந்துள்ளனர்.

6147 பேருக்கு பாதிப்பு
4வது இடத்தில் இந்தியா உள்ளது. நேற்று புதிதாக 6147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10,64,75 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 3,302 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரு நாளில் 115 பேர் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் கொரோனா பாதிப்பு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வேகமாக அதிகரித்து வருகிறது. அதேநேரம் உயிரிழப்பு என்பது இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியா 16வது இடத்தில் தான் உள்ளது. பாதிப்பிலும் இந்தியா உலக நாடுகளை ஒப்பிடும் போது 11வது இடத்தில் தான் உள்ளது.

ஐரோப்பிய நாடுகள் எப்படி
இதற்கிடையே இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் நேற்று 1251 பேருக்கும், பாகிஸ்தானில் 1841 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கொரோனாவுக்கு இதுவரை 939 பேர் உயிரிழந்துள்ளனர். வங்கதேசத்தில் 370 பேர் இறந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளான, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, உள்பட ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. உயிரிழப்பும் முன்பை விட மிக குறைவாக உள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications