Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏழை நாடுகளில் 10 பேரில் 9 பேர் 2021 இல் தடுப்பூசி போட வாய்ப்பில்லை..பின்னணியில் வல்லரசுகளின் அரசியல்

Subscribe to Oneindia Tamil

ஜெனிவா: பணக்கார நாடுகள் கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்கி குவித்து வருகின்றன, இதன் காரணமாக ஏழை நாடுகளில் வாழும் மக்கள் அடுத்த ஆண்டு மருந்து பெறும் வாய்ப்புகளை இழக்க நேரிடும் என்று பீப்பிள்ஸ் தடுப்பூசி கூட்டணி எச்சரித்துள்ளது..

ஆக்ஸ்பாம், அம்னஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் குளோபல் ஜஸ்டிஸ் நவ் போன்ற அமைப்புகளை உள்ளடக்கிய கூட்டணியான பீப்பிள்ஸ் தடுப்பூசி கூட்டணி, 70க்கும் மேற்பட்ட ஏழை நாடுகளில் 10 பேரில் 9 பேர் 2021 ஆம் ஆண்டில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட வாய்ப்பில்லை என்று எச்சரித்துள்ளது. பணக்கார நாடுகள் தங்களுக்கு தேவையானதை விட அதிகமான அளவு மருந்துகளை வாங்கி பதுக்கி வைத்துள்ளன என்று அந்த அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது.

பீப்பிள்ஸ் தடுப்பூசி கூட்டணி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில். உலக மக்கள்தொகையில் 14% மட்டுமே உள்ள பணக்கார நாடுகள் கடந்த மாத நிலவரப்படி மிகவும் நம்பிக்கைக்குரிய கொரோனா மருந்துகளில் மொத்த பங்குகளில் 53% ஐ வாங்கியுள்ளன, இதனால் ஏழை நாடுகள் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு நடுவில் சிக்கி தவிக்கின்றன.

அணுகுமுறை மாற்றம்

அணுகுமுறை மாற்றம்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகியவை தங்கள் அளவுகளில் 64% வளரும் நாடுகளில் உள்ள மக்களுக்கு வழங்குவதாக உறுதியளித்த போதிலும், கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை அணுகுவது உலகம் முழுவதும் நியாயமாக இல்லை. அதற்கான செயல்திட்டங்ளும் சரியாக பின்பற்றப்பட வேண்டியது அவசியம்.

உலக சுகாதார நிறுவனம்

உலக சுகாதார நிறுவனம்

எனவே கொரோனா தடுப்பூசிகளில் பணிபுரியும் மருந்தக நிறுவனங்கள் தங்கள் அறிவுசார் தொழில்நுட்பத்தையும் தொழில்நுட்ப அறிவையும் உலக சுகாதார நிறுவனம் (WHO) மூலம் பகிரங்கமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்படி செய்தால் தான் ஏழை நாடுகளுக்கம் அதிக அளவு உற்பத்தி செய்ய முடியும்.

ஐந்து மடங்கு தடுப்பூசி

ஐந்து மடங்கு தடுப்பூசி

கனடா, மொத்த மக்கள் தொகையின் அளவுகளை விட அதிகமான அளவுகளை மருந்துகளை வாங்கியுள்ளது, அதாவது ஒவ்வொரு கனேடியருக்கும் ஐந்து முறை தடுப்பூசி போடுவதற்கு போதுமான அளவு மருந்தை வைத்திருக்கிறது.

ஏழைகளுக்கு எட்டாது

ஏழைகளுக்கு எட்டாது

டிசம்பர் 8, பிரிட்டனில் உயர்-ஆபத்துள்ள மக்களுக்கு ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் உருவாக்கிய தடுப்பூசி கிடைத்துள்ளது. ஆனால் ஹைதி, எத்தியோப்பியா மற்றும் பூட்டான் உள்பட கொரோனா அபாயங்கள் அதிகம் உள்ள 67 குறைந்த மற்றும் கீழ்-நடுத்தர வருமானம் நாடுகளில் உள்ள பெரும்பாலான மக்கள், மருந்து கிடைப்பது கடினம்.

மூன்று தடுப்பூசிகள்

மூன்று தடுப்பூசிகள்

நன்றாக செயல்படுவதாக செயல்திறன் முடிவுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மூன்று கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில், ஃபைசர் / பயோஎன்டெக் மற்றும் மாடர்னா ஆகிய இரண்டின் கிட்டத்தட்ட எல்லா அளவுகளும் பணக்கார நாடுகளால் வாங்கப்பட்டுள்ளன .

அஸ்ட்ராஜெனெகா

அஸ்ட்ராஜெனெகா

அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தங்களது அளவுகளில் 64% வளரும் நாடுகளில் உள்ள மக்களுக்கு உறுதியளித்துள்ள நிலையில், அடுத்த ஆண்டுக்குள் உலகெங்கிலும் உள்ள மக்கள்தொகையில் 18% பேருக்கு மட்டுமே அந்த நிறுவனத்தால் தர முடியும். சீனா, ரஷ்யா உள்பட உலகின் எட்டு தடுப்பூசிகள் என உலகின் தடுப்பூசி விநியோகத்தின் பெரும்பகுதியை வாங்குவதன் மூலம், பணக்கார நாடுகள் தங்கள் மனித உரிமைகள் கடமைகளை மீறி உள்ளன" என்று அம்னஸ்டி இன்டர்நேஷனலின் பொருளாதார மற்றும் சமூக நீதித் தலைவர் ஸ்டீவ் காக்பர்ன் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+