இரண்டாக பிரியும் ஆப்ரிக்க கண்டம்.. லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பகீர் தகவல்
ஆப்ரிக்க கண்டம் இரண்டாக பிரிவதாக லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
நைரோபி: ஆப்ரிக்க கண்டம் இரண்டாக பிரிவதாக லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் ஏதாவது ஒரு நாடு நாள்தோறும் நிலநடுக்கத்தை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக பொருட்சேதம் உயிர்ச்சேதம் ஏற்படுவதும் வாடிக்கைதான்.
இந்நிலையில் நிலநடுக்கம் காரணமாக பூமியின் மேற்பரப்பு மற்றும் அடித்தட்டுகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன.

மிகப்பெரிய நிலப்பிளவு
இதனிடையே கென்யாவில் நிலநடுக்கம், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. இந்த இயற்கை பேரழிவுகளால் ஆப்பிரிக்க கண்டத்தில் மிகப்பெரிய நிலப்பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பலத்த சேதம்
இது குறித்து லண்டன் பல்கலைக்கழகத்தின் ராயல் ஹாலோவேயின் ஆராய்ச்சியாளர் ஒருவர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் சமீபத்தில் ஆப்பிரிக்க கண்டத்தில் நில அதிர்வு ஏற்பட்ட போது கென்யாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள நைரோபி - நரோக் நெடுஞ்சாலை முழுவதும் பலத்த சேதமடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருதட்டுகளாக பிரித்து
இந்த நில அதிர்வை தொடர்ந்து வடக்கே ஏடன் வளைகூடா தொடங்கி தெற்கே ஜிம்பாப்வே வரை சுமார் 3000 கி.மீ. தூரத்திற்கு நிலப்பகுதியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்த பிளவு ஆப்பிரிக்க கண்டத்தை இரு தட்டுகளாக பிரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

பிளவுப்பட வாய்ப்பு
மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவு உள்ளிட்ட காரணங்களால் இந்த பிளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதாகவும், இது தொடரும் நிலையில் ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்பு உள்ளது என்றும் அந்த ஆராய்ச்சியாளர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications