தாய்லாந்து: ரயிலில் சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம்! கிரேன் விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு!
பாங்காக்: தாய்லாந்தில் ஓடும் ஒயில் மீது கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தற்போது வரை 32 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் வடகிழக்கே 230 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நக்கோன் ராட்சசிமா மாகாணத்தின் சிகியோ மாவட்டத்தில் நேற்று காலை இந்த விபத்து நேரிட்டுள்ளது. உபோன் ராட்சதானி மாகாணத்துக்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது, ரயில் மீது கிரேன் விழுந்துள்ளது.

விபத்து நடந்த இடத்தில், அதிவேக ரயில் திட்டப் பணி நடைபெற்று கொண்டிருந்தது. இதற்காக பயன்படுத்தப்பட்ட கிரேன் சரிந்து ஓடிக்கொண்டிருந்த ரயில் மீது விழுந்தது. இதனால், ரயில் தடம் புரண்டு தீப்பற்றியது. தற்போது தீ அணைக்கப்பட்டு விட்டன. இந்த விபத்தில் 22 பேர் பலியான நிலையில் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. ஏராளமானோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், தாய்லாந்து ரயில் மீது கிரேன் விழுந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. பலர் உடல் நசுங்கி படுகாயம் அடைந்துள்ள நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அச்சம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தாய்லாந்தின் பாங்காக்கை லாவோஸ் வழியாக சீனாவின் குன்மிங் பகுதியுடன் இணைக்கும் அதிவேக ரயில் சேவைக்கான கட்டுமானப் பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. சுமார் 540 கோடி டாலர்கள் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட கிரேன் தான் ரயில் மீது விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications