பிரிட்டன் வளர்ச்சியில் இந்தியர்களுக்கும் பங்குள்ளது: டேவிட் கேமரூன் புகழாரம்
லண்டன்: இங்கிலாந்தில் வாழும் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துக்களை அந்த நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் வெஸ்ட் மினிஸ்டர் நகரில் உள்ள 10 டவுன் பகுதியில் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான தீபாவளி பண்டிகை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அந்நாட்டு பிரதமர் கேமரூன் கலந்து கொண்டு உற்சாகமாகக் கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் கூறுகையில், "பிரிட்டனுக்காக இந்தியர்கள் வியக்கத்தக்க பங்களிப்பு செலுத்தியுள்ளனர். இங்கிலாந்தின் தேசிய காலண்டரில் தீபாவளி பண்டிகை முக்கியமான நிகழ்ச்சி. இங்கிலாந்தில் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜெயின் மதத்தினர் உள்பட அனைத்து மதத்தினரும் தங்கள் மகத்தான பங்களிப்பை அளித்து வருகின்றனர். அமைதியான, மகிழ்ச்சியான தீபாவளி பண்டிகைக்கு அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
3 நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நாளை லண்டன் செல்கிறார். தனது பயணத்தின் முதல் நாளான 12-ம் தேதி பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனை பிரதமர் மோடி சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications