இங்கிலாந்தில் தாவூத் இப்ராஹிமின் ரூ.2,500 கோடி முதலீடு: முடக்க அமலாக்கத் துறை திட்டம்
லண்டன்: இங்கிலாந்தின் கென்ட் நகரில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீடு செய்துள்ளதை அமலாக்கத்துறை (Enforcement Directorate) கண்டுபிடித்துள்ளது.
தாவூத் இப்ராஹம் இங்கிலாந்தில் அந்த ஹோட்டல் தவிர பல்வேறு முதலீடுகள் தெய்துள்ளது தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து தவிர துருக்கி, மொராக்கோ உள்ளிட்ட நாடுகளில் தாவூத் முதலீடு செய்துள்ளதை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது.

தாவூத் இப்ராஹிமின் நிதி நிலைமை மோசமாகும்படி செய்தால் தான் அவரை நிலைகுலைய வைக்க முடியும். தாவூத் செய்துள்ள முதலீடு குறித்து கூடுதல் தகவல் அளிக்குமாறு அமலாக்கத் துறை இங்கிலாந்து, துருக்கி மற்றும் மொராக்கோவில் உள்ள அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.
அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் இருந்த தாவூதின் சொத்துக்களை முடக்கியது போன்று இந்த சொத்துக்களையும் முடக்குவோம் என அமலாக்க இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் தாவூத் முதலீடு செய்ய முக்கிய மூளையாக இருப்பது இக்பார் மிர்ச்சி தான். இங்கிலாந்தில் நிறுவனங்கள் நடத்தும் இந்தியர்களின் உதவியோடு தாவூத் முதலீட்டு விவகாரங்களுக்கு மிர்ச்சி உதவியது தெரிய வந்துள்ளது.
தாவூத் இங்கிலாந்தில் மட்டும் ரூ.2 ஆயிரத்து 500 கோடிக்கு முதலீடு செய்துள்ளார் என்று அமலாக்கத்துறைச் சேர்ந்த அதிகாரி ஒன்இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்.
அமலாக்க இயக்குனரகத்தைச் சேர்ந்த 4 பேர் கொண்ட குழு விரைவில் இங்கிலாந்து, துருக்கி, மொராக்கோ சென்று தாவூதின் முதலீடுகள் குறித்து மேலும் விசாரணை நடத்த உள்ளது. தாவூதின் முதலீடு விவகாரத்தில் உளவுத் துறை, இந்திய போலீஸ் மற்றும் சிபிஐ ஆகியோரின் உதவி கோரப்பட உள்ளது.
தாவூத் துபாயில் ரியல் எஸ்டேட்டில் அதிகம் முதலீடு செய்துள்ளார். இங்கிலாந்தை விட அவர் துபாயில் தான் அதிகம் முதலீடு செய்துள்ளார் என்று உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து துபாய்க்கு செய்யப்பட்ட செல்போன் காலை ஒட்டு கேட்டதில் தாவூத் துபாயில் பெரிய அளவில் முதலீடு செய்யவிருப்பது தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications