பிலிப்பைன்ஸ் குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 12-ஆக உயர்வு.. 24 பேர் கவலைக்கிடம்

Subscribe to Oneindia Tamil

தாவோ: பிலிப்பைன்ஸ் நாட்டில் தாவோ நகரத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்து 12 பேர் பலியாகியுள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் இருந்து சுமார் 960 கிலோ மீட்டர் தொலைவில், தெற்கே அமைந்துள்ள தாவோ நகரில் இரவு நேர மார்கெட் பகுதியில் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

Deadly blast strikes market in Philippines' Davao city

இதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 24 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து தங்கும் மார்கோ போலோ ஓட்டல் அருகில் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்துள்ளனர். இறந்தவர்கள் அல்லது படுகாயம் அடைந்தவர்களின் எத்தனை பேர் வெளிநாட்டினர் என்ற விவரம் இன்னும் வெளிவரவில்லை.

இந்த சம்பவத்தை அடுத்து நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+