For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிலிப்பைன்ஸ் குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 12-ஆக உயர்வு.. 24 பேர் கவலைக்கிடம்

Google Oneindia Tamil News

தாவோ: பிலிப்பைன்ஸ் நாட்டில் தாவோ நகரத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்து 12 பேர் பலியாகியுள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் இருந்து சுமார் 960 கிலோ மீட்டர் தொலைவில், தெற்கே அமைந்துள்ள தாவோ நகரில் இரவு நேர மார்கெட் பகுதியில் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

Deadly blast strikes market in Philippines' Davao city

இதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 24 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து தங்கும் மார்கோ போலோ ஓட்டல் அருகில் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்துள்ளனர். இறந்தவர்கள் அல்லது படுகாயம் அடைந்தவர்களின் எத்தனை பேர் வெளிநாட்டினர் என்ற விவரம் இன்னும் வெளிவரவில்லை.

இந்த சம்பவத்தை அடுத்து நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

English summary
A blast has ripped through a night market packed with customers in Davao in southern Philippines, killing at least 12 people and wounding 60 others.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X