லாகூரில் 2 சர்ச்சுகளில் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
லாகூர்: பாகிஸ்தானின் லாகூரில் உள்ள 2 தேவாலயங்களில் இன்று குண்டுகள் வெடித்ததில் பலியானோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள யூஹானாபாத் பகுதியில் இருக்கும் 2 தேவாலயங்களின் வாசல்களில் இன்று காலை குண்டுகள் வெடித்துச் சிதறின. இந்த சம்பவத்தில் 6 பேர் பலியாகினர், 40 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில் பலியானோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்க தேவாலயத்திற்கு கிறிஸ்தவர்கள் வந்து கொண்டிருந்த நேரத்தில் இந்த இரட்டை குண்டுவெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் தாலிபான் அமைப்பின் கிளையான ஜமாத்துல் அஹ்ரார் பொறுப்பேற்றுள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இது தற்கொலைப்படை தாக்குதல் என்றனர். ஆனால் அதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. மேலும் குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடையவர் என்று சந்தேகித்த இரண்டு பேரை பொதுமக்கள் பிடித்து அடித்து நொறுக்கினர். மேலும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள கட்டிடங்களை சேதப்படுத்தியும், கடைகளை சூறையாடியும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
முன்னதாக கடந்த 2013ம் ஆண்டு பெஷாவர் நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 80 பேர் பலியாகினர். பாகிஸ்தானில் கிறிஸ்தவ சமூகத்தை குறி வைத்து அடிக்கடி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி பெஷாவர் நகரில் உள்ள ராணுவத்தினரின் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்குள் புகுந்த பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரிக் இ தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 132 குழந்தைகள், பள்ளி ஊழியர்கள் என மொத்தம் 145 பேர் பலியாகினர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications