லாகூரில் 2 சர்ச்சுகளில் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
லாகூர்: பாகிஸ்தானின் லாகூரில் உள்ள 2 தேவாலயங்களில் இன்று குண்டுகள் வெடித்ததில் பலியானோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள யூஹானாபாத் பகுதியில் இருக்கும் 2 தேவாலயங்களின் வாசல்களில் இன்று காலை குண்டுகள் வெடித்துச் சிதறின. இந்த சம்பவத்தில் 6 பேர் பலியாகினர், 40 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில் பலியானோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்க தேவாலயத்திற்கு கிறிஸ்தவர்கள் வந்து கொண்டிருந்த நேரத்தில் இந்த இரட்டை குண்டுவெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் தாலிபான் அமைப்பின் கிளையான ஜமாத்துல் அஹ்ரார் பொறுப்பேற்றுள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இது தற்கொலைப்படை தாக்குதல் என்றனர். ஆனால் அதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. மேலும் குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடையவர் என்று சந்தேகித்த இரண்டு பேரை பொதுமக்கள் பிடித்து அடித்து நொறுக்கினர். மேலும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள கட்டிடங்களை சேதப்படுத்தியும், கடைகளை சூறையாடியும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
முன்னதாக கடந்த 2013ம் ஆண்டு பெஷாவர் நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 80 பேர் பலியாகினர். பாகிஸ்தானில் கிறிஸ்தவ சமூகத்தை குறி வைத்து அடிக்கடி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி பெஷாவர் நகரில் உள்ள ராணுவத்தினரின் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்குள் புகுந்த பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரிக் இ தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 132 குழந்தைகள், பள்ளி ஊழியர்கள் என மொத்தம் 145 பேர் பலியாகினர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications