காதுகேட்க, வாய்பேச முடியாத பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை – 6 பேர் சேர்ந்து பலாத்காரம்
Subscribe to Oneindia Tamil
பிலிபிட்: உத்தர பிரதேச மாநிலத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதட்டத்தையும், பரபரப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் புரன்பூர், கோட்வாலி என்ற இடத்தில் வாய்பேச இயலாத, காது கேளாத உடல் ஊனமுற்ற பெண் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றது. அவர் மணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த நபர்கள் அந்த பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்நிலையில் அவர்கள் பிடியில் இருந்து எப்படியோ அந்த பெண் தப்பிச் சென்றார்.
இதுகுறித்து, அந்த பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அவர்களுடைய அடையாளம் இதுவரையில் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications