தேவ்யானிக்கு எதிராக கைது வாரண்ட்: யு.எஸ். எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: இந்தியா திரும்பியுள்ள தேவ்யானி கோப்ரகடேவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்படலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில்ம், தேவயானிக்கு இனிமேல் தூதரக முறையிலான சட்டப் பாதுகாப்பு இல்லை.

அமெரிக்காவில் இருந்து அவர் புறப்படும் முன்பு, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜராகவில்லை எனில், அமெரிக்கா திரும்ப அவருக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்பதை அவருக்கும், இந்திய அரசுக்கும் தெரியப்படுத்திவிட்டோம்.
தேவ்யானியின் பெயர் இனிமேல் விசா மற்றும் குடியேற்ற நடைமுறைகளில் தேடப்படும் நபரின் பட்டியலில் இடம்பெறும். அவரைக் கைது செய்வதற்கான வாரண்ட்டும் பிறப்பிக்கப்படலாம் என்றார்.












Click it and Unblock the Notifications