இம்ரானின் கட்சியை கைப்பற்ற அவருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்த மாஜி மனைவி ரெஹம்?
இஸ்லாமாபாத்: முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கானுக்கு அவரது முன்னாள் மனைவி ரெஹம் விஷம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி பத்திரிக்கையாளரான ரெஹமை திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்த பத்தே மாதத்தில் இம்ரானும், ரெஹமும் மனம் ஒத்து விவாகரத்து செய்துவிட்டதாக கடந்த 30ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர்கள் மனம் ஒத்து விவாகரத்து பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விஷம்
ரெஹமுக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை. ஆனால் அதற்கு இம்ரான் சம்மதிக்கவில்லை. இந்நிலையில் ரெஹம் இம்ரானின் கட்சியை கைப்பற்ற அவருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்ததாக கூறப்படுகிறது.

எலி பாசானம்
முன்னதாக இம்ரான் கான் லட்டு சாப்பிட்ட பிறகு அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவரது உடலில் எலி பாசானம் இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

அடி, உதை
ரெஹம் தனது முன்னாள் கணவரை அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளார். மேலும் அவர் இம்ரானையும் அடித்து வந்துள்ளார். ரெஹமின் கொடுமை தாங்க முடியாமல் தான் இம்ரான் உள்ளாட்சி தேர்தல் நெருங்கினாலும் விவாகரத்தை அறிவித்தார் என பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஆரிப் நிஜாமி தெரிவித்துள்ளார்.

கட்சி
ரெஹம் கட்சியை எப்படி நடத்துவது என்று இம்ரான் கானுக்கு பாடம் எடுத்துள்ளார். இதையடுத்து அவர் ரெஹமை லண்டனுக்கு அனுப்பி வைத்துவிட்டு பின்னாலேயே இமெயில் மூலம் விவாகரத்தையும் அளித்துள்ளார் என்கிறார் நிஜாமி. இம்ரான், ரெஹம் திருமணம் பற்றி அறிவித்தவரும் இந்த நிஜாமி தான் அவர்களின் விவாகரத்து குறித்து அறிவிப்பு வெளியிட்டவரும் அவரே தான்.

பணம்
ரெஹம் சினிமா படம் எடுக்க இம்ரான் கட்சி தலைவர்களிடம் இருந்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது. ரெஹமின் இந்த செயல்களால் இம்ரான் எரிச்சலில் இருந்துள்ளார்.












Click it and Unblock the Notifications