டொனால்டு டிரம்ப் மீது ஆபாசப் பட நடிகை பரபர பாலியல் புகார்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் மீது ஆபாசப் பட நடிகை பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் களத்தில் உள்ள தொழில் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது ஏற்கனவே பல பெண்கள் பாலியல் புகார்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆபாசப் பட நடிகையான ஜெசிகா டிரேக் என்பவரும் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
டிரம்ப்
கடந்த 2006ம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள லேக் தஹூவில் நடந்த கோல்ப் போட்டியின்போது நான் டொனால்டு டிரம்ப்பை முதல்முதலாக சந்தித்தேன். அவர் என்னுடன் கடலை போட்டார்.
ஹோட்டல் அறை
கோல்ப் மைதானத்தில் தன்னுடன் சேர்ந்து நடந்து வருமாறு கூறினார். பின்னர் என்னை தனது ஹோட்டல் அறைக்கு அழைத்தார். நான் 2 பெண்களுடன் சென்றேன்.
கட்டிப்பிடி
ஹோட்டல் அறையில் டிரம்ப் என்னையும் மற்ற இரண்டு பெண்களையும் இழுத்துப் பிடித்து கட்டிப்பிடித்தார். மேலும் எங்களின் அனுமதி இல்லாமலேயே எங்களை முத்தமிட்டார்.
ஆபாசப் படம்
ஆபாசப் படங்களில் நடிப்பது எப்படி இருக்கும் என டிரம்ப் என்னிடம் கேட்டார். நான் என் அறைக்கு வந்த பிறகு டிரம்ப் போன் செய்து தனது அறைக்கு வருமாறு அழைத்தார். எவ்வளவு பணம் வேண்டும் என கேட்டார்.
பணம்
டிரம்ப் மீண்டும் போன் செய்து தன்னுடன் பார்ட்டிக்கு வந்தால் 10 ஆயிரம் டாலர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள எனது வீட்டிற்கு அவரின் விமானத்தில் செல்லலாம் என்றார்.
டிரம்ப் அலுவலகம்
டிரேக் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். டிரம்புக்கு டிரேக் யார் என்றே தெரியாது. இது டிரம்ப்பின் பெயரை கெடுக்க கிளிண்டன் ஆதரவாளர்கள் செய்த வேலை என டிரம்ப் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.