Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈராக்கில் இஃப்தார் விருந்தில் பரிமாறப்பட்ட உணவில் விஷம்: 45 ஐஎஸ் தீவிரவாதிகள் பலி

Subscribe to Oneindia Tamil

மொசுல்: ஈராக்கின் மொசுல் நகரில் இஃப்தார் எனப்படும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியின்போது 145 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சாப்பிடும் உணவில் விஷம் கலக்கப்பட்டதில் 45 பேர் பலியாகினர்.

ஈராக்கின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மொசுல் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ளது. புனித ரமலான் மாதத்தில் தீவிரவாதிகள் நோன்பு வைத்து வருகிறார்கள். ஈராக் மற்றும் சிரியாவில் நோன்பு வைக்காதவர்களை பிடித்து தீவிரவாதிகள் தூக்கிலிட்டு வருகிறார்கள்.

Dozens of Islamic State fighters 'poisoned' in Iraq

இந்நிலையில் மொசுல் நகரில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தீவிரவாதிகள் கலந்து கொண்டனர். அப்போது 145 தீவிரவாதிகள் சாப்பிட்ட உணவில் விஷம் கலக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 45 தீவிரவாதிகள் பலியாகினர்.

இந்த தகவலை ஈராக் மற்றும் குர்திஷ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. முன்பும் கூட கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் சிரியாவைச் சேர்ந்த போராளி ஒருவர் சமையல் கலைஞர் போன்று வேடமிட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் முகாமுக்குள் புகுந்து பலருக்கு விஷம் வைத்தார் என்று கூறப்பட்டது.

யார், எதற்காக தீவிரவாதிகளுக்கு விஷம் வைத்தார்கள் என்பது தெரியவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+