துபாய் தமிழ்ச் சங்கத்தில் முன்னாள் மத்திய அமைச்சருக்கு வரவேற்பு
துபாய்: துபாய் தமிழ்ச் சங்கத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான மணிசங்கர் அய்யருக்கு 01.11.2013 அன்று மாலை வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமை வகித்தார். துபாய் தமிழ்ச் சங்கத்தின் பணிகள் குறித்து நிறுவன புரவலரும் துணைத் தலைவருமான குத்தாலம் ஏ லியாக்கத் அலி விவரித்தார்.
துபாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நினைவுப் பரிசு மற்றும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார் மணிசங்கர் அய்யர். தன்னை கௌரவித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்ட அய்யர் துபாய் தமிழ்ச் சங்கத்தின் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். தமிழ்ச் சங்கத்தின் பணிகளுக்கு தனது ஒத்துழைப்பு என்றும் இருக்கும் என்று தெரிவித்துக் கொண்டார்.

நிகழ்ச்சியில் துபாய் தமிழ்ச் சங்க நிறுவனப் புரவலரும், பொழுதுபோக்குத்துறை செயலாளருமான ஏ முஹம்மது தாஹா, செய்தியாளர் முதுவை ஹிதாயத், ஆஷா தாஹா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications