மாயமான மலேசிய விமானத்தை தேடும் பொறுப்பை ஏற்ற டச்சு நிறுவனம்

Subscribe to Oneindia Tamil

சிட்னி: மாயமான மலேசிய விமானத்தை தேடும் பொறுப்பை நெதர்லாந்தைச் சேர்ந்த நிறுவனமான ஃபக்ரோ ஏற்றுக் கொண்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. ஆனால் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாகவும், அதில் இருந்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு அறிவித்தது.

இதையடுத்து தெற்கு இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பணி மாதக்கணக்கில் நடந்து வருகிறது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி ஆஸ்திரேலியா தலைமையில் நடந்து வருகிறது. ஆனால் இது வரை விமானத்தின் பாகம் எதுவும் கிடைக்கவில்லை.

கடலுக்கு அடியிலும்

கடலுக்கு அடியிலும்

விமான பாகங்களை தேட ஆளில்லா நீர்மூழ்கி கப்பலும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் பயனில்லாமல் போனது.

உண்மையாகவே

உண்மையாகவே

விமானத்தை மாதக் கணக்கில் தேடியும் பாகமோ, பயணிகளின் உடலோ, உடைமையோ எதுவும் கிடைக்கவில்லை. அதனால் விமானம் அங்கு தான் விழுந்து மூழ்கியதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

12 மாதங்கள்

12 மாதங்கள்

கடலுக்கு அடியில் 60 ஆயிரம் சதுர அடியில் விமானத்தை தேட 12 மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

ஃபக்ரோ

ஃபக்ரோ

விமானம் குறித்த தகவல் எதுவும் இதுவரை கிடைக்காத நிலையில் விமானத்தை தேடும் பொறுப்பு நெதர்லாந்தைச் சேர்ந்த ஃபக்ரோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு

அறிவிப்பு

ஃபக்ரோ நிறுவனம் நிபுணர்கள் உதவியுடன் விமானத்தை தேடும் என்று ஆஸ்திரேலிய துணை பிரதமர் வாரன் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+