Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏலியன்களை நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது.. ஏன் தெரியுமா? விஞ்ஞானிகள் சொல்லும் வித்தியாசமான காரணம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சூரியனுக்கு அருகில், போதுமான தூரத்தில் பூமி இருப்பதால் இங்கு தண்ணீர், நீர் வடிவில் இருக்கிறது. எனவே உயிர்கள் வாழ்கின்றன. இதேபோல மற்ற சூரியனுக்கு அருகில் இருக்கும் கிரகங்களிலும் உயிர்கள் (ஏலியன்கள்) இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதற்கான தேடல்கள் நடந்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், நம்மால் கடைசி வரை ஏலியன்களை கண்டுபிடிக்க முடியாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பூமியில் உள்ள கடற்கரையில் உள்ள மணல் துகள்களை விட, பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகம். நமது சூரியனும் ஒரு நட்சத்திரம்தான். ஒவ்வொரு நட்சத்திரத்தை சுற்றியும் கோள்கள் வலம் வரும். நட்சத்திரத்திலிருந்து போதுமான தூரத்தில் உள்ள கோள்களில் உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். இதனை 'வாழக்கூடிய மண்டலங்கள்'(Habitable zone) என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Earth space Alien

இப்படியான கிரகங்களை கண்டுபிடிக்க நாம் தீவிரமாக முயன்று வருகிறோம். ஆனால் இந்த முயற்சிகள் மூலம் ஏலியன்களை கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமான விஷயம் என்று கூறும் விஞ்ஞானிகள், மீறி கண்டுபிடித்தாலும் அதை நம்மால் நேரில் பார்க்க முடியாது எனவும் தெரிவித்திருக்கின்றனர்.

இதற்கு காரணம் 'வாழக்கூடிய மண்டலங்கள்' என்பது ஒரு கானல் நீர் போன்றது. அதாவது நமது சூரியன் இளமையாக இருந்தபோது அது 70% அளவுக்கு மட்டுமே வெளிச்சத்தையும், வெப்பத்தையும் கொடுத்து வந்தது. அப்படியெனில் நமக்கு முன்னால் இருக்கும் வெள்ளி கிரகத்தில் தண்ணீர், நீர் வடிவத்தில் இருந்திருக்கிறது. அங்கு உயிர்கள் வாழ்வதற்கான அனைத்து சூழல்களும் இருந்தன. உயிர்கள் வாழ்ந்திருக்க கூட வாய்ப்பு இருந்திருக்கிறது. ஆனால் இன்று சூரியன் வளர்ந்திருக்கிறது.

எனவே சூரிய குடும்பத்தில் மிகவும் வெப்பமான கிரகமாக வெள்ளி மாறியிருக்கிறது. இன்றைய தேதியில் அங்கு உயிர்கள் இருக்க சுத்தமாக வாய்ப்பே இல்லை.

இது எப்படி நடந்தது? ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் பிறப்பு, இறப்பு என்கிற கட்டம் இருக்கிறது. அப்படியெனில் அது வளர்கிறது என்று அர்த்தம். சூரியனும் அப்படித்தான். இன்னும் சில லட்சம் வருடங்கள் கழித்து, சூரியன் இப்போது இருப்பதை விட பெரியதாக வளர்ந்திருக்கும். எனவே செவ்வாய் கிரகத்தில் துருவ பகுதியில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகி, தண்ணீராக மாறும். அதேபோல வியாழன் மற்றும் சனி கிரகத்தின் நிலவுகளிலும் இதே மாற்றம் ஏற்படும்.

சிம்பிளாக சொல்வதெனில் பூமி, உயிர்கள் வாழ லாயக்கி அற்ற கோளாக மாறி, செவ்வாய் கிரகமும், வியாழன், சனியின் துணை கோள்களும் 'வாழக்கூடிய மண்டலங்களாக' மாறும்.

இதேதான் பிரபஞ்சம் முழுக்க நடக்கும். நாம் அனுப்பி வைக்கும் விண்கலன்கள், சில நூற ஆண்டுகள் கழித்து ரொம்ப தூரத்தில் உள்ள ஒரு கோளில் உயிர்கள் இருப்பதை எப்படியோ கண்டுபிடித்துவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த உயிர்களை பார்ப்பதற்காக நாம் அங்கு போவதற்குள் அந்த கிரகம், 'வாழக்கூடிய மண்டலங்கள்' என்கிற இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கும். கிரகத்தின் நட்சத்திரம் வளர்வதால் இந்த மாற்றம் ஏற்படும்.

இது ஒரு கானல் நீர் மாதிரியான விளையாட்டு. அங்கு ஏலியன்கள் இருப்பதாக நமக்கு தோன்றும். ஆனால் போய் பார்ப்பதற்குள் அங்கு எல்லாம் அழிந்து போய் இருக்கும். கடைசி வரை நம்மால் ஏலியன்களை கண்டுபிடிக்கவே முடியாது என்று அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக அவர்கள் எழுதியுள்ள கட்டுரை ஒன்று 'தி ஆஸ்ட்ரோபிசிகல் ஜர்னலில்' வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+