For Daily Alerts
Just In
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.3 ஆக பதிவு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 5.3 ஆக பதிவாகி உள்ளது.
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.3 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காபூல் நகரை ஒட்டிய பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.3 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் படக்ஷான் மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள இந்து குஷ் மலை பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜுர்ம் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 192.8 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
Comments
English summary
5.3 magnitude tremors in Kabul, epicentre in Hindu-Kush region
Story first published: Wednesday, November 16, 2016, 5:04 [IST]