பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.2 ஆக பதிவு
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ஸ்வாத் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள பெஷாவர், ஸ்வாத் பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.2 ஆக பதிவாகியுள்ளது. ஆனால், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஹஸ்ரோ, பஞ்சாப் போன்ற இடங்களை மையமாக்க கொண்டு 12 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் நவ்சேரா, ஹரிப்பூர், ஸ்வாபி உள்ளிட்ட இடங்களில் உணரப்பட்டதாக கூறப்பட்டது.
கடந்த மாதம் இதேபோன்று வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.












Click it and Unblock the Notifications