ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் ஓட்டம்!
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ: ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
ஜப்பானின் தெற்கு பகுதியில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
ஜப்பான் அடிக்கடி இயற்கை பேரிடர்களுக்கு ஆளாகி வருகிறது. ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மக்கள் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் கொல்லப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications