பாகிஸ்தானில் நிலநடுக்கத்திற்கு 30 பேர் படுகாயம் - டெல்லியில் தயார் நிலை

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 41 பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்துள்ள 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கம் தலைநகர் புதுடில்லி, ஜம்முகாஷ்மீர் மாநிலங்களில் உணரப்பட்டது.இது ரிக்டர்அளவு கோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் எல்லையை மையாமாக கொண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், பாகிஸ்தான், வடஇந்திய மாநிலங்களான டெல்லி, காஷ்மீர் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Earthquake shakes Pakistan, Afghanistan and India

ஆப்கனிஸ்தானில், உள்ளூர் நேரப்படி, இரவு 11.44 க்கு தலைநகர் காபூலுக்கு வடகிழக்கே 280 கிலோ மீட்டர் தொலைவில், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால், ஆப்கனிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் பல்வேறு கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. பாகிஸ்தானின் பெஷாவர் நகரில், கட்டடங்கள் இடிந்து விழுந்ததில், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், உயிரிழப்புகள் குறித்த தகவல் இல்லை.

இந்த நடுக்கத்தின் தாக்கம், டெல்லி, ஜம்மு மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களின் ஏராளமான பகுதிகளில் உணரப்பட்டன. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் தெரியவில்லை. டெல்லியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனை முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒருபடியாக அனைத்து முன்னேற்பாடுகளுடன் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+