லைபீரியாவில் படுவேகமாக பரவும் 'எபோலா' வைரஸ்: பலர் பாதிக்கப்படும் அபாயம்- உலக சுகாதார அமைப்பு
ஜெனிவா: மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் எபோலா வைரஸ் மிக வேகமாக பரவுவதால் அடுத்த சில வாரங்களில் ஆயிரக்கணக்கானோர் வைரஸால் தாக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லைபீரியா, கினியா, சியர்ரா லியோனில் எபோலா வைரஸ் பரவியுள்ளது. அதில் லைபீரியாவில் தான் எபோலாவின் தாக்கம் அதிகம் உள்ளது.
எபோலா வைரஸ் தாக்கி கினியா, சியர்ரா லியோன், லைபீரியா மற்றும் நைஜீரியாவில் இதுவரை 2 ஆயிரத்து 100 பேர் பலியாகியுள்ளனர்.

செனகல்
எபோலா வைரஸ் தற்போது மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மற்றொரு நாடான செனகலுக்கும் பரவியுள்ளது.

மக்கள்
எபோலா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த 6 முதல் 9 மாதங்கள் ஆகும் என்றும், அதற்குள் 20 ஆயிரம் பேர் வைரஸால் தாக்கப்படலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

லைபீரியா
லைபீரியாவில் உள்ள 15 கவுன்ட்டிகளில் 14ல் எபோலா வைரஸ் பரவியுள்ளது. மேலும் வைரஸ் படுவேகமாகப் பரவி வருவதால் மேலும் ஆயிரக்கணக்கானோர் எபோலாவால் பாதிக்கப்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

நோயாளிகள்
லைபீரியாவில் எபோலா மருத்துவ மையங்கள் புதிதாக திறக்ககப்பட்டு வருகின்றன. எத்தனை மையங்கள் திறந்தாலும் உடனே அவை எபோலா நோயாளிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன.

டாக்சி
டாக்சிகள் மூலம் தான் லைபீரியாவில் எபோலா அதிகம் பரவி வருகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ஊரடங்கு உத்தரவு
எபோலா வைரஸ் பரவுவதை தடுக்க இரவு நேரத்தில் தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து லைபீரிய அரசு திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications