துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் சுவைமிக்க தமிழகத்து நோன்புக் கஞ்சி!
துபாயில் ஈமான் அமைப்பின் சார்பில் நோன்பாளிகளுக்கு தமிழகத்து நோன்பு கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது.
துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் சுவைமிக்க தமிழகத்து நோன்புக் கஞ்சி நோன்பாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நோன்புக் கஞ்சியானது துபாய் தேரா பகுதியில் உள்ள லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் என்றழைக்கப்படும் குவைத் பள்ளிவாசல், லத்திபா பள்ளிவாசல் மற்றும் அஸ்கான் ஹவுஸ் பின்புறம் உள்ள பள்ளிவாசல் ஆகிய இடங்களில் ரமலான் மாதம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.
ரம்ஜான் மாதம் தொடங்கியுள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் நாள்தோறும் நோன்பு மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் துபாய் ஈமான் அமைப்பு சார்பில் அங்குள்ள இஸ்லாமியர்களுக்கு நோன்புக் கங்சி வழங்கப்பட்ட வருகிறது.
இந்த பணிகள் அனைத்தும் துபாய் ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் நடைபெறுகிறது

4000 பேருக்கு கஞ்சி
தினமும் நான்காயிரத்துக்கும் அதிகமானவர்கள் இந்த நோன்புக் கஞ்சியின் மூலம் பயனடைந்து வருகின்றனர். நோன்புக் கஞ்சியுடன் இரண்டு சமோசாக்கள், ஆரஞ்சு பழம், ஜுஸ், பேரிச்சம் பழம், அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

பல்வேறு நாட்டு இஸ்லாமியர்கள்
இதனை இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்பிரிக்க மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தமிழகத்து நோம்பு கஞ்சியை அருந்தி மகிழ்கின்றனர். ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் கீழை ஏ.ஹமீது யாசின், துணைப் பொதுச்செயலாளர் பூதமங்கலம் முகைதீன் அப்துல் காதர், பொருளாளர் கீழை அப்துல் உபூர் காக்கா, துணைத் தலைவர் கீழை முஹம்மது மஹ்ரூப், மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், விழாக்குழு செயலாளர் திண்டுக்கல் ஜமால் முகைதீன், சையது பாட்சா, லெப்பைக்குடிகாடு படேஷா பஷீர், வி.களத்தூர் சர்புதீன், இல்யாஸ், காயல் யஹ்யா முஹ்யித்தீன், ஆலோசகர் குத்தாலம் அஷ்ரப் அலி, கம்பம், முஹம்மது அலி, சீனிபாவா, சுவாமிமலை இஸ்மாயில் ஹாஜியார் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈமான் அமைப்புக்கு பாராட்டு
மேலும் லத்திபா பள்ளிவாசலில் காதர் முகைதீன், யாகூப் உள்ளிட்ட குழுவினரும், அஸ்கான் ஹவுஸ் பின்புறம் உள்ள பள்ளிவாசலில் காயல்பட்டணம் முஹம்மது ஈசா, ஹிதாயத்துல்லா, ரவூப் உள்ளிட்ட குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகளை பார்வையிட்ட திருநெல்வேலி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் எல்.கே.எஸ். மீரான் முகைதீன் ஈமான் அமைப்பு செய்து வரும் பணிகளை பாராட்டினார்.

கடுமையான வெப்பத்திலும்
கடுமையான வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் தன்னார்வ தொண்டர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. தனது அமீரகப் பயணத்தில் இது மறக்க முடியாத நிகழ்வாகும் என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் எல்.கே.எஸ். மீரான் முகைதீன் தெரிவித்தார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications