235 பேரை கொல்ல பயன்பட்ட வாகனங்கள் தாக்கி அழிப்பு.. எகிப்து போர் விமானங்கள் அதிரடி!
எகிப்தின் விமான படையை சேர்ந்த போர் விமானங்கள் தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை தடம் தெரியாமல் அழித்தன.
கெய்ரோ: எகிப்தில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 235 பேர் கொல்லப்பட்டனர். எகிப்தின் விமான படையை சேர்ந்த போர் விமானங்கள் தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை தடம் தெரியாமல் அழித்தன.
எகிப்து நாட்டின் வடக்கு சினாய் நகரில் வெள்ளி கிழமையான நேற்று மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நவீன ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் திடீரென தீவிரவாதிகள் மசூதிக்குள் நுழைந்தனர்.
மேலும் மசூதியில் வெடிகுண்டுகளை வீசியும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதன்பின்னர் தீவிரவாதிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
|
235 பேர் பலி
இந்த கொடூர சம்பவத்தில் 235 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோழைத்தனமான தாக்குதல்
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், ஒன்றுமறியாத மற்றும் தற்காத்து கொள்ள முடியாத நிலையில் இருந்தவர்கள் மீது நடந்த மிக கொடிய மற்றும் கோழைத்தனம் நிறைந்த தீவிரவாத தாக்குதல் என தெரிவித்துள்ளார்.
|
போர் விமானங்கள் தாக்குதல்
இந்த நிலையில், எகிப்தின் விமான படையை சேர்ந்த போர் விமானங்கள் தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை தடம் தெரியாமல் அழித்தன.
|
ஆயுதங்கள் அழிப்பு
மேலும் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பகுதிகளை இலக்காக கொண்டும் எகிப்து போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் தீவிரவாதிகளின் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் அழிக்கப்பட்டதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications