எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்சிக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை
கெய்ரோ: எகிப்தில் அரசு ரகசியங்களை கத்தார் நாட்டிற்கு தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் வழக்கில் முன்னாள் அதிபர் மோர்சிக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கெய்ரோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எகிப்தில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர் முகமது மோர்சி. முப்பதாண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த 2012 ஆம் ஆண்டில் பதவியிலிருந்து இறக்கிவிட்டு அதிபர் பதவியைக் கைப்பற்றிய மோர்சியால் ஓராண்டுக்கு மேல் அந்தப் பதவியில் நீடிக்க முடியவில்லை.

எகிப்தின் ராணுவத் தலைவராக இருந்த அப்டெல் சிசி, மோர்சியை பதவியிலிருந்து இறக்கி கைது செய்து சிறையிலும் அடைத்தார். அவர்மீது பல வழக்குகள் தொடரப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.
2011-ம் ஆண்டு, ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான கிளர்ச்சியின்போது ஜெயில் உடைப்பில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வக்கில் மோர்சிக்கும் அவருக்குத் துணை புரிந்த முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் முக்கிய தலைவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், வேவு பார்த்து அரசின் ரகசியங்களை கத்தார் நாட்டிற்கு தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் மோர்சி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால், அவருக்கு ஆயுள் தண்டனை (25 ஆண்டு சிறைவாசம்) விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். வேவு பார்த்த வழக்கில் கூடுதலாக 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதன்மூலம் அவர் மொத்தம் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.
இதே வழக்கில் மரண தண்டனை பெற்ற முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் 6 பேரின் தண்டனையும் உறுதி செய்யப்பட்டது. மேலும் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை (25 ஆண்டுகள் சிறைவாசம்) விதிக்கப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications