நாட்டுக்கு எதிராக சதி: எகிப்தின் முன்னாள் அதிபர் மோர்சிக்கு மரண தண்டனை?
கெய்ரோ: ராணுவத்தால் பதவியிறக்கப்பட்ட எகிப்து அதிபர் முகம்மது மோர்சி தேசிய பாதுகாப்பு குறித்த ஆவணங்களை கத்தாருக்கு அளித்த குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
எகிப்து அதிபராக இருந்த முகம்மது மோர்சிக்கு எதிராக அந்நாட்டில் போராட்டம் வெடித்தது. இதையடுத்து அந்நாட்டு ராணுவத்தால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மோர்சி பதவியிறக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

எகிப்து நாட்டு பாதுகாப்பு குறித்த ஆவணங்களை கத்தார் மற்றும் தோஹாவைச் சேர்ந்த அல் ஜெசீரா தொலைக்காட்சிக்கு அளித்தது குறித்த வழக்கை மோர்சி உள்ளிட்ட 10 பேர் சந்தித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் மோர்சிக்கு மரண தண்டனை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
போராளிகளுக்கு எதிராக வன்முறையை தூண்டிவிட்டது, வெளிநாட்டு அமைப்புகளுடன் சேர்ந்து சதி செய்தது, முன்னாள் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் பதவி பறிபோக காரணமாக இருந்த 2011ம் ஆண்டு போராட்டத்தின்போது சிறைகளில் இருந்தவர்கள் தப்பிக்க உதவியது ஆகிய 3 வழக்கு விசராணைகளை சந்தித்து வருகிறார் மோர்சி.
மோர்சி ஹமாஸ் தீவிரவாத அமைப்புடன் சேர்ந்து நாட்டின் பாதுகாப்பை குலைக்க சதி செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications