ஈராக் இஸ்லாமியப் போராளிகள் தாக்குதல் – எதிர் கொள்ள கூட்டு முயற்சியில் எகிப்து, சவுதி அரேபியா!
ரியாத்: ஈராக்கில் தற்போதைய அரசுக்கு எதிராக நடைபெற்றுவரும் இஸ்லாமியப் போராளிகளின் தாக்குதல்களை எதிர் கொள்ள எகிப்தும், சவுதி அரேபியாவும் ஒரு கூட்டு முயற்சியைத் துவக்கி உள்ளது.
எகிப்தின் அதிபர் அப்தெல் பட்டா அல் சிசியும், சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாவும் இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்திற்கு எதிரானவர்களாகக் கருதப்படுகின்றனர்.

ஈராக்கின் நிலைமை குறித்து ஆய்வு செய்த அவர்களின் சந்திப்பு அரபு முஸ்லிம் நாடுகளிடையே தற்போது காணப்படும் சூழ்நிலையில் முக்கியத்துவம் பெறுவதாக சவுதியின் வெளியுறவுத்துறை அமைச்சரான இளவரசர் சவுத் அல் பைசல் தெரிவித்தார்.
வெளிநாட்டு, உள்நாட்டு போர்கள், துரோகம் மற்றும் சர்ச்சைகள் தலையீடு போன்றவை அதிகரித்துக் காணப்படும் இந்த நேரத்தில் பகைமையை எதிர்கொள்ள ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியமாகும் என்றும் அவர் கூறினார்.
எகிப்தின் அதிபர் முகமது மோர்சி கடந்த ஆண்டு பதவி இறக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இஸ்லாமியப் போராளிகளின் தொடர் தாக்குதல்களை அந்த நாடு எதிர்கொண்டதும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications