25 தமிழர்களை சுட்டுக்கொன்ற நாயுடுவை கைது செய்க.. அமெரிக்க மேயருக்கு பறந்த மெயில்கள்!
செம்மரம் வெட்டிய தொழிலாளர்கள் கொலை சம்பவத்திற்காக, சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய வேண்டும் என்று இ-மெயில் புகாரில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்: ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக கூறி அம்மாநில போலீசாரால் 25 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய வேண்டும் என்று அமெரிக்காவின், இர்விங் நகர மேயருக்கு அனாமதேய இ-மெயில் கோரிக்கைகள் சென்று குவிந்துள்ளன.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள இர்விங் நகரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், இர்விங் நகர மேயர் பேத் வான் டுய்ன்-னுக்கு வந்த சில இ-மெயில்கள் அவரை தூக்கி வாரிப்போட்டன.
இமெயிலை அனுப்பியது 'மனித உரிமைகளுக்காக போராடும் இந்தியர்கள்' என்ற பெயரிலான ஐடியில் செயல்படுவோர்களாகும்.

25 தொழிலாளர்கள்
அந்த இ-மெயிலில், திருமலை அருகேயுள்ள சேசாச்சலம் வனப்பகுதியில் 25 தொழிலாளர்களை ஆந்திர போலீசார் சுட்டுக்கொன்றதாகவும், இவர்களை செம்மரம் கடத்தியதாக குற்றம்சாட்டி, இப்படி சரமாரியாக சுட்டுக் கொலை செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே தமிழர்கள் என்பது இதில் கவனிக்கத்தக்கதாகும்.

இ-மெயில் புகார்
இந்த கொலை சம்பவத்திற்காக, சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய வேண்டும் என்று இ-மெயில் புகாரில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இந்த இ-மெயில்கள் எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களால் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டாலும், அதன் பின்னணி பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

நன்கொடை
அமெரிக்க குடிமக்களிடமிருந்து அதிகப்படியான நன்கொடையை அனுமதியின்றி சந்திரபாபு நாயுடு பெற்றுவருவதாகவும் இ-மெயில்களில் குற்றம்சாட்டப்பட்டன. அமெரிக்க முதலீட்டாளர்கள், ஆந்திராவை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்களிடம், ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியை அமைக்க நிதி உதவி கோரி சந்திரபாபு நாயுடு பயணம் மேற்கொண்டுள்ளார்.

விசாரணை
இ-மெயில் புகார்களை தொடர்ந்து, அவர் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு போலீசார் சென்று விசாரித்து பார்த்தபோது, அது அனுமதி பெறப்பட்டு நடைபெறும் நிகழ்ச்சி என்பது உறுதி செய்யப்பட்டதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
'அவசர' ஆலோசனை.. ஹோட்டல்களைக் காப்பாற்றுமா தமிழக அரசு? நேரடியாக களத்தில் இறங்கிய முதல்வர்! -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்! -
காலியான வீதிகள்.. விழி பிதுங்கும் தொழிலதிபர்கள்.. ஆள் இல்லாத "அமீரகம்".. கோஸ்ட் டவுன் துபாய்! -
கச்சா எண்ணெய் தோண்டிய படுகுழி.. காலில் கோடாரியை போட்ட டிரம்ப்.. அமெரிக்க டாலர் சாம்ராஜ்ஜியம் ஓவர்! -
உலகையே திரும்பி பார்க்க வைத்த.. 'மிஸ்டரி' போன் கால்.. புடினிடம் போனை போட்ட கெஞ்சிய டிரம்ப்? -
அமெரிக்கா தொலைத்த 6 அணுகுண்டுகள்.. ஈரான் கையில் கிடைத்தால் என்னவாகும்? -
LPG சிலிண்டர் தட்டுப்பாடு டீசர்தான்.. மெயின் பிரச்சனையே இனிதான்.. கவனமா இருங்க.. வரப்போகும் சிக்கல் -
ஈரான் போருக்கும்.. LPG சிலிண்டருக்கும் என்ன தொடர்பு? எப்படி தட்டுப்பாடு வந்தது? சிக்கலின் ஆதி புள்ளி -
LPG சிலிண்டர் தட்டுப்பாடு.. சென்னையில் நிலைமை எப்படி இருக்கு? ஹோட்டல்கள் மூடப்படுமா? பின்னணி -
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி!












Click it and Unblock the Notifications